Sunday, July 05, 2015

fallen angel

ஓராயிரம் கண்கள்
ஈராயிரம் பார்வை
கருப்பும் வெளுப்பும்
இடையே கோடி
சாம்பல்களுமாய் ..

சுய உருவமும்
குணமும் அற்று
தொடுவன அனைத்தும்
பற்றிக்கொண்டு
எங்கும் நில்லாது
சதா அலையும்
ஒரு உயிர்க் கூடு.
எவன்டா இவன்?

வெளியே
இவ்விதம் இருக்க
அவன்
மறந்த தென்னவோ
மூவுலகங்களையும்
இமைக்காது விழிக்கும்
ஒரே பார்வையுடைய
தேவன்,
இந்திரன்.

No comments:

Post a Comment