Sunday, March 28, 2010

நினைவுகளாய் காலம்..

நினைவுகளாய் காலம்..
வலியில் விழிக்கிறேன்
கண்ணீர் கழுவிச் செல்கிறது
கலந்த காலம்
கடந்த காலம்.

கனவு பட்டங்களில் பறக்கிறேன் -
நூலேணி நினைவுகள் நீளத்திற்கு.
கண்கள் பழகாத உயரத்திற்கு

விரையும் மேகங்கள்
சொல்லிச் செல்லும்
வருவது சுழல்காற்றுடன்
அடைமழை.

நூலேணி நினைவுகள்
நீள நீள
கனவு பட்டம்
தொட விழையும்
கருவானில்
ஒரு வானவில்.
-- விஷ்வேஷ்வரன்

நினைவெல்லாம் நித்யா

நினைவெல்லாம் நித்யா

கதவை திற
காற்று வரட்டும்.

திறந்த கதவில்
நுழைந்தது
நாடோடித் தென்றல்.

மறந்தது நிதானம்
ஜன்னல் வழியே
பறந்தது ஆனந்தம்.

first poetry written along with significant contribution from my wife bhuvana

Saturday, March 27, 2010

வயிற்றுக்கு மேல் இதயம்

இதயம் எட்டாத தொலைவில்
சிந்தனைகளின் பெட்டகம்.
சதா சிந்தனை புழுதி
செந்நிறமாக..
சுள்ளென்று ..
இதயத்தின் ஈரம்
அறவே இல்லாது..

ஆசனவாயின் மேல் பற்கள்
நர நரக்கின்றன ..
சதா சர்வகாலமும்
மூடாத வாய்கள் இருபுறமும் ..
மூத்திர வாடையுடன்
வார்த்தைகள் உதடுகளில் ..

தெறித்து விழும்
சிந்தனை சகதி
தாண்டி சென்று
படைத்தவனை கேட்கிறேன்.
படைப்பில் கோளாறா?

வயிற்றுக்கு மேல் இதயம் தந்தேன்
வயிற்றின் பசி
இதயத்தை தின்னாதிருக்க..

நீரென்ன செய்தீர்?
இதயம் சிந்தனைக்கும்
வயிற்றுக்கும்
இடையே ஏனென்று
எதிலும் சேர்க்காது
ஒளித்து வைத்தீர்.

சிந்தனை விரிந்து , பரவி
சுழன்று அடிக்க
வயிற்றில் அக்னி பெருகி
அகோர பசியுடன்
பேயாய் மாறித் தவிக்கிறீர்.

நும் இதயம் மட்டும்
தேடி எடுத்தாரும்.
மனிதம் மீட்டு தருவேன் என்றார்.

Tuesday, March 23, 2010

The i-generation

செல்போனில்
நண்பனின் அப்பா.
கிராமத்து விவசாயி!
நேராக விஷயத்திற்கு வந்தார்.

"முடிஞ்சா நேர்ல ஒரு நடை வரச்சொல்லேன்.
இழுத்தார்.
"அம்மாவுக்கு மருந்துக்கு ரொம்ப செலவாயிருச்சு.
அறுவடைக்கு கையில காசு பத்தல."

இரவில் நண்பன் வந்ததும் சொன்னேன்.

farmville இல் மும்முரமாய்
விளைச்சல் அறுவடை
செய்தவாறே சொன்னான்.
"இப்போ பிஸியா இருக்கேன்
அப்புறமா வரேன்னு சொல்லிடு"