Wednesday, November 07, 2012

Zen on the road

An empty open highway
biking to a place faraway
vroooming miles after miles
melting the rubber in wheels.
wind on the face
thanks to the pace.

the sky is azure
my mind is clear
sunny and cloudless
The mind gone away thoughtless

Ahoy!
Heart bobs with joy

In the bike thatz vrooming
Phut came the bloom
And the heart's blossom

I am in harmony
I need no money
It does not buy joy

Oh! boy!
Happiness is in
being here and now!
wowow!

Leave back your mind
on the wind
Down to the roads
Along with the toads

Satori on a Suzuki!

Wednesday, October 24, 2012

Click!

The one eyed Cyclops
Greedy to have it all
Staring with eye wide-open
Motionless as a hunter
Waiting without expression
In a timeless stillness ...

Click! 

Wednesday, August 22, 2012

Oh! Fish


ஏராளமான முட்கள்  வாயைச் சுற்றி. 

சில  முட்களில்  தூண்டிலிட்டவனின்
கலர் நூலும் உண்டு,
பாடமும் படிப்பித்தவனும் 
ஞாபகம் வைத்துக் கொள்ள  வசதியாய்.

பல முட்கள் 
எங்கே எப்படி மாட்டியவை 
என்று தெரியாது.

நூலும் இல்லை. 
தூண்டிலிட்டவனும் இல்லை. 
முட்கள் மட்டும் மிச்சம்.

நிதம் தோறும்  முட்கள்  தரும்  
ரண  வேதனை.

ஆயினும் அடுத்த வேளை 
பசியில் அற்ப மீனின் மூளைக்கு  
எட்டுவதில்லை 
முள்  மாட்டிய புழுவைக் கடிக்க கூடாதென்ற அனுபவம்.

பசிப்பிணி தீர்க்கும் போராட்டத்தில் 
வாயினால் ஊனுக்கு ஊணும்
ஊறும்  வருவிப்பது 
ஊழ் வினைப் பயனே என உரைப்பேன்.

Sunday, August 05, 2012

பிரயாணம் -- short story


ஙண ஙண ஙண ஙண ஙண ஙண என மானிட்டர்களின் அலாரம் அலறித் தள்ளிக் கொண்டிருந்த போது முருகன் icu வின் பிரக்ஞையற்று  இருந்தார்.
-----
காது கப்பென அடைத்து ஒரு மாதிரி நெஞ்சில் குளிர்ந்த நீரின் அழுத்தமும், மூச்சு நெடுநேரம் அடக்கியதின் எரிச்சலும் சேர்ந்து பேரவஸ்தையாய் இருந்தது. சிரமப்பட்டு சற்றே கண் திறந்து பார்த்த போது நீச்சல் குளத்தின் விளிம்பில் யாரோ நிற்பது தெரிந்தது. தண்ணீரின் அழுத்தம் ஒரே உந்தில் மேலே வரை தள்ளி விட்டது. 

கரையோரத்தில் ஒயிட் &ஒயிட்டில் பளிச்சென்று சந்தனகீற்றும் குங்குமமுமாய் புது ஆள் நின்று கொண்டிருந்தான். செக்கரட்டரி சிவராஜனைக் கேட்க வேண்டும், டிரைவர் எப்போது மாற்றினான் என்று.

"அய்யா, கிளம்பலாங்களா? நேரம் ரொம்ப ஆச்சுங்க. அற்புதமா நீஞ்சறீங்கய்யா"
பளீரென்ற ஒரிஜினல் பல் சிரிப்பில், ஓவராய் பேசறானோ என்று மனதில் எழுந்த கமெண்ட் அமுங்கிப் போனது.

மெளனமாய் உடை மாற்றிக் கொள்ளும் போது கேட்கத் தோன்றியது. வார்த்தை மட்டும் வரவில்லை. தொண்டை அடைத்தது. குளோரினா, நேற்றைய ராத்திரி ஸ்காட்ச்-ஆன் -தி-ராக்ஸா?

பேச முற்பட்ட போது எரிந்தது. செருமி செருமி ஒரு போராட்டத்துக்குப் பின், "என்ன வண்டி எடுதாந்துருக்க?"

"பளசுதான்யா. சர்வீஸ் விட்டு எடுத்தப்புறம் சல்லுனு போவுதுங்க"

காது, மூக்கு அடைப்பு மட்டும் போகவில்லை. 

ஞாயிற்றுக்கிழமை காலையில் தன்னந்தனியே ஒரு ஹைடெக் நீச்சல் குளத்தில் நீண்ட நீச்சலுக்குரிய வசதி வாய்ப்பும், சம்பாதித்த சுகவாழ்க்கை குறித்த ஒரு மெல்லிய சந்தோஷம் இருந்தது.

"எப்போ எடுப்பாங்க?"

"தெரியலீங்கய்யா. மதியம் எப்படியும் மூத்த தம்பி கணேசு வந்திருவாக. அப்புறமேல்ட்டு எடுப்பாகனு நினைக்கேன்"

"போய் சேர எத்தினி நேரம் ஆவும்பா?"

"இன்னக்கி லீவ் நாள்னால சீக்கிரமே போயிரலாங்க"

டாக்டர். தர்மராஜ் தனது படை பரிவாரங்களுடன் முருகனை முற்றுகையிட்டார். டியூட்டி நர்ஸ் மகா டென்ஷனுடன் டாக்டருக்கு கேஸ் விபரங்கள் சொல்லிக்கொண்டிருந்தாள்.

"இன்னிக்கி காலைல வரை நல்லா தான் இருந்தார் சார். ஜெனரல் வார்டிக்கு மாற்றம் பண்ணலாம்னு கூட சித்ரா மேடம் சொல்லிட்டு இருந்தாங்க"

டாக்டர் தர்மராஜ் ஒரு ஹிட்லர். அவருடைய கண்டிப்புக்கும், தொழிலுக்கு கொடுக்கும் மரியாதைக்குமே அந்த ஆஸ்பத்திரிக்கு தனியாக கூட்டம் தேடித் தந்தது.
"எந்த சித்ரா?" உறுமினார். ஜூனியர் டாக்டர் நர்ஸுக்கு கண்ஜாடை காட்டினார் "சும்மா இரு"
நர்ஸுக்கு வேறு வழியில்லை. சொல்லித்தான் ஆக வேண்டும்.
"சி.. சித்... சித்ரா குப்தா. பெங்களூரிலிருந்து புதுசா டிரைய்னிங் முடிச்சு வந்து இருக்காங்கள்ள...."

தர்மராஜ் அதை கவனித்த மாதிரி தெரியவில்லை. மகா மும்முரமாய் உத்திரவு போட்டுக் கொண்டிருந்தார். ஜூனியர்கள் பறந்து கொண்டிருந்தனர். களேபரமாய் இருந்தது.

முருகன், சினிமாவில் அசிஸ்டண்டாய் ஆரம்பித்து, டைரக்டர், நடிகர், தயாரிப்பாளர் என்று முன்னேறி, தகுந்த சமயத்தில் ஜாதி பலத்துடன் அரசியலில் புகுந்து எம்.பி, மந்திரி என்று உயர்ந்தவர். முதல்வருக்கு வலது இடது கை. எதிர் கட்சியனரும் பயப்படும் அளவுக்கு செல்வாக்கு. 

அடுத்த தேர்தலுக்கு மும்முரமாய் சுற்றிக்கொண்டிருந்த போது, இந்த சின்ன ஊரின் அருகே ஒரு சாலை விபத்தில் மாட்டிக் கொண்டு 10 நாள் முன்பு பலத்த அடியுடன் தர்மராஜின் மருத்துவமனையில் icuவுக்கு வந்து சேர்ந்தார்.

இப்போது அவருக்கும், ஆஸ்பத்திரிக்கும் தருமசங்கடம்.
 முருகனைத் தேடி வரும் கட்சிப் பிரமுகர்கள், ஒரு பக்கம். "தலைவருக்கு ஏதாவது ஆச்சின்னா.." என்று மிரட்டிப் போகும் கைத்தடிகள், மறுபக்கம். 
தலைநகரிலிருந்து ஓயாமல் வந்து கொண்டிருக்கும் தொலைபேசி அழைப்புகள்... மேற்பார்வைக்கு வந்து சேர்ந்த பல டாக்டர்களின் கேள்விகள், குடைச்சல்கள். கூட்டம். கூட்டம். டாக்டர் தர்மராஜ் தூக்கம் தொலைத்து 3 நாள் ஆச்சு. 
--- 
புது டிரைவர் திறமைசாலிதான். வேகம் போவதே தெரியாத வண்ணம் பறந்து கொண்டிருந்தான். நீச்சலின் அசதியில் தூக்கம் தாலாட்டியது. டிரைவருக்கு ஏதோ மொபைலில் கால் வந்தது தெரிந்தது. சன்னமான குரலில் ஸ்டைலாக மொபைலை கழுத்துக்கும் தாடைக்கும் இடையே குடுத்து பேசிக் கொண்டிருந்தான்.
எந்த கேள்பிரண்டோ ?
---
மிக அருகே தர்மராஜின் மூச்சு சப்தம் கேட்டது. எல்லோரும் இடித்து தள்ளிக் கொண்டு ஓடும் சப்தம் கேட்டது. உடம்பு தூக்கி வாரிப் போட்டது.. யாரோ காலை அழுத்திப் பிடித்தது தெரிந்தது. சரக்கென்று மார்பில் இன்ஜெக்ஷன் குத்தினர். ஆக்சிஜன் ஆக்சிஜன் என்று யாரொ கத்திக் கொண்டு இருந்தனர். 

உடம்பின் சகல பாகத்திலும் வலி திருகித் திருகி வலிக்க, யாரோ ஒரு டாக்டர் கடவுளே கடவுளே என்று கதறியது கேட்டது. முருகன் கண்களில் நீர் தன்னிச்சையாக கொட்ட, வாய் கோணிப் போய், கை கால் உதறிப் போட்டுக் கொண்டிருந்த பிராணவஸ்தை நேரத்தின் ஒரு கணத்தில், சரேலென எழுந்தார். ஆஆஆஆஆஆ.......................
---
"அய்யா பார்த்துங்க. தலை இடிக்கப் போவுது. பைய அப்படியே உக்காருங்க. இனிமே பிரச்சனை இல்லீங்க. விரசா போயிரலாமுங்க. அல்லாரையும் இன்னும் கொஞ்ச நேரத்துல பாப்பீக "

தலை சுற்றியது. முருகன் தலையை தூக்கி பார்த்தார். 

வண்டியின் ஜன்னலுக்கு வெகு கீழே மேகங்கள் வெய்யிலில் மின்னின. பூமியின் நீலவளைவும், அதற்கு மேல் தொலை தூர நட்சத்திரங்களும் .. இது வரை பார்த்தேயிராத காட்சி, அல்லது நெடுநாளுக்கு முன் பார்த்தது?.. 


Wednesday, July 18, 2012

மாதேரன் குதிரையும் நானும்


Mind Works II


Hence, it is important to watch our mind and what we are bringing from the subtle sub-conscious world to the physical world.  How do we do that? How do we heal the mind?

I am getting back to blogging after considerable amount of time. Mind works II is posted after considerable delay.

The fundamental objective of any living being is BEING HAPPY.

What IS happiness?
What BRINGS happiness?

I bet very few of us have ever thought about these questions – leave alone finding answers. We just take happiness for GRANTED.

On the other extreme is suffering.

What IS suffering?
What BRINGS misery?

I bet this is an easy question.

I am suffering because of ………… (my boss, my relationship with so-and-so., my situation at work/home/in-between, and so on. You may fill in the blanks with your own)

Ah! Everyone has got few or many things to write about.

It is as if suffering is given; Inevitable. Not an option. It is never a choice.

And it is the suffering we always run away from, all the life – proactively and reactively. And there are few clever business people who write, talk about eliminating suffering and make millions of dollars in the process.

Am I one of them? No, certainly not. I am also a co-sufferer like you. What makes me more qualified is, I perhaps suffered more and hence I tried to find a bit more about how mind works.

Fundamentals first, But what is happiness and what is suffering?

Both are states of mind. Ok. Umm.. Sounds simple? But why do I suffer more than being happy? Why do I suffer more than others?

Now, we need to dig deep into understanding what causes different state of mind and how mind works.

Hey, I am not a psychiatrist (or psychologist?) or a MD. So, do not expect to babble medical or para medical terminologies.

It is very simple to understand. And hence, many of us just ignore - Never have bothered to look at it deeply.

 Let’s draw the analogy of water boiling in a kettle, placed in a stove.

Conscious mind – This is the top most layer of the water in the kettle. We can visualize lots of bubbles exploding on the surface, releasing steam. It is never calm. It is the place of visible action.

The analogy is good enough to understand what happens in our conscious mind.

We are battered by thoughts, more and more thoughts, coming up every moment like bubbles. Conscious mind is through which we learn, memorize and our day to day existence depends heavily on the conscious mind.

If the conscious mind is better organized, it will do wonders.

But, for most of us, it is always not the case. We don’t know why we feel in a particular way. Why we get angry? Why we feel jubilant? Why are we elated? Why we feel depressed? Why we feel victimized? Why there are mood swings?

The emotions are always there and the surface of the conscious mind has one or more emotions breaking surface by way of memories, or interpretations of the world around us. The conscious mind is a battlefield of the emotions of the past or the future.

How much ever, we try to calm the mind; the mind always seems to have a way on its own and carries on with its own business; never in control; Very difficult to stay calm; focused and relaxed.

I hope you have experienced what I am saying, right?

It is suffering when mind is agitated; Confused; full of emotions. It is a damn chaotic place.

Exercise:

Where do this thought bubbles come from?
How do I control?
Why I calm some times and why am I agitated more often?
Why do I think in a particular way?

The answer lies not in the surface, but little deeper. Lets go.

Subconscious mind:

As an analogy it is the layer that starts near the bottom of the kettle and extends up to the layer below the surface of the water.

It is the area where the bubbles emerge from the bottom, gradually expand as they rise and builds momentum near the surface.

What if we try to put a mesh filter or a spoon in the kettle and block the bubble path?

The bubbles simply circumvent the spoon and continue to rise up. The bubbles always try to find the shortest path of escape.

What if we try to block the bubble path entirely?

The bubbles accumulate below the block and with time, they build enough momentum and energy to push the blockade out of their way.

If there is sufficient heat, and the blockage is not removed, the result is a pressure cooker situation. It can lead to an explosion also!

The sub conscious mind is no different.

The subconscious mind is the area what holds our identity of what I am, who I am to whom, ego, likes, dislikes, afflictions, etc.   This is the mind that is not normally seen or observed. It comes out during our sleep, as dreams.

I am not going to bring up Freud and other mind experts here. I assure, you, it is not very difficult to comprehend either.

All you need to understand is, many of the things we consciously do not know, why we feel so, come from subconscious mind.

Many times when we question our own behavior of why I did something that way, have their answers in the subconscious mind.

Point is, we never bothered to peep in to the dark areas of our own mind.

The subconscious layer is actually very deep – like an ocean.

Now, linking the analogy with the mind:

The subconscious mind produces thought bubbles - Random thoughts to start with.

And every one of us has a sub-conscious design on our own. (Call it DNA/genetics or the basic personality).

The subconscious design act like a filter in the kettle and it blocks some thought bubbles and it allows some thought bubbles to escape out.

In real life, we are born with a set pattern of subconscious mind. Only it is a matter of time that the subconscious mind gets revealed /manifested, bit by bit.

It is the set subconscious design pattern that traps thought bubbles. With time, the thought bubbles start accumulating on the design.

The random thoughts become thoughts with (sub conscious) attention.

With more time, the traps store considerable amount of energy waiting to be released or waiting to burst the trap open.

The trap holds enough energy that the thoughts with subconscious attention have become recurring thought patterns.

The subconscious mind is always active and absorbing stimuli from the external environment and suggests back our response to the external environment.


Why some children are optimistic?
Why some children are pessimistic?
Why we fear certain things?
Why we avoid certain incidents? Why we like some? Dislike some?

The subconscious design with its associated recurring thought patterns create its own pattern of learning, self-image and sets us how we react/respond to the conscious world.

When the thought bubbles explode, they rise to the conscious mind as an emotional outburst – anger, sadness, rage, despair, joy etc.

The net result is SUFFERING as seen from the conscious mind.

Ok. Now, that I know how my subconscious mind works, how do I reduce my suffering? How do I release the pressure out of my subconscious design?

(To be continued)

Friday, July 06, 2012

WTF?

What do you expect, when you don't know what to expect?

A holy Ghost in the Internet



I see
But I ai'nt seen
Am in between your windows
Just looking at you.

I want to speak
I can't say a'thing -
what i see and what i saw
But I am not heard

I can relate
Your every emotion
But I am not in relation.

I do  my part
with many others
In the play with an unseen Director 

I have always been with you.
Up close and near.

Ask your heart
In the language of love


I will be seen
As you see yourself.


A holy ghost in the Internet.

Friday, June 01, 2012

Mind Works - I


Here is how the mind works.

Random thoughts --> Thoughts with attention --> Recurring thought patterns --> Emotions-- >  Desire --> Action --> Behavior --> Habits --> Karmic entanglement.

To create/break any habit, it is important to see the linkage between thought pattern and emotion.

We have no control over how we feel (neurotransmitters are autonomous. They follow their own bio-rhythmic cycle of highs and lows) . Eg. Love, compassion, generosity, anger, sadness. No one can say, what we shall be feeling in the next ten minutes.

Feelings are linked closer to Godhood - At best indescribable (feeling) experience.

Examples:: "Love just happens!", Gut feel, The Hindi word "Bhaav".

However, when we add the thoughts to the feelings, they become emotions.

Emotions can be defined, communicated, sorted, analyzed and stored in the ego-mind complex. There is always a target for emotions. They are not free standing like Feelings.

Example:. I love my parents. I am angry towards corruption. I am sad because I lost my i-phone.


Feelings are more subtler and beyond the grasp of the ego-mind complex and stimulus. Kind of self generated. The mind can not alter the way we feel.


However, we can alter the way we emote to stimuli. 

The mind has great control over re-creating emotions at its will. It affects the body as well.

Example: We may be in a great mood. But we may watch a horror movie, and come out of the theater with elevated BP, nervous system wrecked with cortisol (stress hormone) and a compromised immune system. All self created by the Will of the mind.

Seeds for diseases are sown through the mind that get manifested later, with more abuse.




Exercise 1: Think about someone, some place, some food. You will observe that the emotion also comes tagged along with it. If the memory is strong enough, we can re-create the same mood and emotions as well.

The sense organs do not have memory on their own. They are always in the Now. Sensations at the body do not lead or lag. They happen in real time and vanish in real time, as well. 


We just can not hold on to any sensation - pleasure or pain. They come and go in their own accord. This should answer, why we have a craving for sensations. 


Exercise 2: I am sure most of us would have played a ball game. - Cricket, Basketball, tennis, Table tennis etc. Have you observed? For optimum game performance, the coach asks to quieten the mind and concentrate on the game. i.e. without any thoughts and BE IN THE NOW!!

Exercise 3: I am sure most of us can trace the ball hitting a wall and returning back and track the entire movement with the eyes and catch the ball without even thinking twice. Now, try to jog the memory to a distant past or distant future, alternately and quickly. The mind would collapse on its own! Worst case, it may create a phantom head ache. It will take immense practice to do that.

Whenever there is an emotion, (positive or negative, let's not qualify)  the mind is either in the past or in the future. There is always a memory or a projection, behind every emotion.



Exercise 4: Remember  two incidents - one good and one bad, that happened around 5 - 8 years of age. Make an effort to jog the memory (how much ever it is faded) and live through it.

You may be surprised to know that the emotions are still sharper, stronger and it is possible to live through it, almost the same way it occurred then.

So, what does it mean? The emotions are only hidden underneath the layers and layers of memory and they have not gone anywhere else! They have not lost the potency.

Over a period of time, the mind-ego complex becomes a haunted house of old, junk memories that do not find an exit to get released.

The haunts often interrupt the "Mind in the Present" and give rise to phobia, anxieties and set-mind-patterns of destruction. An altered perception of reality - most often the incorrect interpretation of the reality.

The body does not know the difference what is real and what is mind-induced!! The body responds to the mind in the same way, it reacts to the real world and gradually the body is also a victim of the mind. Result: Psycho-somatic illnesses.


Hence, it is important to watch our mind and what we are bringing from the subtle sub-conscious world to the physical world.  How do we do that? How do we heal the mind?


(Contd)


பழக்கம் 

மறப்பேன் என சூளுரைத்து
கால் சுற்றிய பாம்பை
கட்டவிழ்க்க
தவித்துப் புலம்பி
நித்தம் நிதம்
போராடிப் போராடி

திடும் என  ஒரு நாள்
எந்த முயற்சியும் இல்லாதது போல்
முடிச்சு அவிழ்ந்தது.
பாம்பும் நகர்ந்தது.

பல நாள் நிம்மதியின்பின்
அயர்ந்து உறங்கும்
ஓர் இரவின் அதிகாலைக் கனவில்
கிளர்ந்தெழுந்து
பழக்க உருவில் படம் எடுத்தது
ஞாபக நாகம்.

சிவ சிவா  என
பரம சிவனைப் பார்த்தால்
பரம சிவன் கழுத்திலும் நாகம்!

Background:

Snakes are used as a metaphor for recurring thought patterns.







Nidharsanam

நின்ற இடம்
நடந்த இடம்
உலகம் மறந்து
சிரித்திருந்த இடம்.

இன்று
உலகம் மட்டும்
சிரிக்கிறது.

நான் தனியே நடக்கிறேன்
துக்கத்தை துணையாய் கொண்டு.

எங்கு காணினும் உன் முகம்
குரல், வாசம் அருகாமை.

நிதர்சனம் முகத்தில் அறைகிறது
நீ இல்லை என்று.

தொண்டை அடைத்து
நெஞ்சில் வலித்தாலும்
ஓட்ட வைத்த புன்னகையுடன்
உன் நினைவுகள் ஏந்துவேன்.

குழந்தையைப்
தோளில் போட்டுத் தாலாட்டி
தூங்கப் பண்ணுவது போல்
மெதுவே மெதுவே
என் துக்கம் துறப்பேன்.

உன்னையும் மறப்பேன்.


நிதர்சனம்
மறுபடியும்
முகத்தில் அறைகிறது.
 -- விஷ்வா (2003-04)

Sunday, January 22, 2012

puridhal


புரிதல் 

கதவு கல கலத்தது, சிரித்தது. 
ஒருக்களித்த வாசல் கதவில் 
வளை ஒலி.
சீலையிட்ட ஜன்னல் சொல்லியது
"இல்லை. வேறு வீடு பார்."

வெய்யில் கண்ணாடி உரையிட்ட கார் கதவின்
முன் கை ஏந்தலுக்கு மகா மௌனம் பதிலாக.

குட்டி திரையில் குறுஞ்செய்தியில்   
தினத்தின் தலை எழுத்து 
மாற்றும் அவசர உத்தரவுகள்..

கணினி ஜன்னல்களில் வயிற்றுப்பிழைப்பு.

வீடு திரும்பினால் 
கார்டூன்களாய் திரை முன்னால்
கரையும் குழந்தை பிராயம் .. 

இவ்விடம் முகம் பார்த்தும் 
மனம் புரிவதில்லை 

நாளின் இறுதியில் 
வளைவுகளுடன் 
விசும்பும் போர்வை - 
அரை குறை புரிதலின், இயலாமை.

Saturday, November 26, 2011

TOI 2020: The oldest inmate in Arthur Road Jail dies in sleep.

THE NIGHT BEFORE ...


When I woke up, I was happy and excited. It seemed the white walled room seemed to radiate my happiness. Was it looking whiter than before?


Is today the day of my release? Freedom, at last? I don’t know.


I was promised of Jannat many many years ago. The time has come now, I believe.


I was saying F .. R .. E.. E .. D.. O.. M, letter by letter. It tasted sweet in the throat.
I laughed.. I was saying FREEDOM, FREEDOM, FREEDOM.. It sounded silly.. I was laughing my a** off.


Is it the day of freedom? I don't know. Rather I don't care....


You think I am showing an attitude?? I care a damn. That is the way I am. You should have seen me during my youth. I would have cussed you enough to pull puss out of your ears.


Hey! Hang on. Who are you? 


Do I know you? Sorry, I did not register your name, if you had said.


What did you say? 


I have a hearing problem. Am getting old nah?


Are you asking how old I am..


I don't know.. I don't count. 


I am very old, too old to count.. I forget what I was counting half way.


Rarely do I get the dreams of my youth - Happy and unhappy days in Punjab, as a distant dream.. A fading dream..


There is that one night, i want to forget. Perhaps I would have forgotten but that keeps recurring as a dream. I strongly believe that the night itself was only a dream.

I keep hearing the voices - Few young voices I did not remember hearing during that night, but they always appear in the dream.. trembling voices, shrill and begging for life. 


Who am I to amend the dream ..


Who am I? Ah! Did I did not tell you?


Who WAS I? I don't remember. When I remember I will tell you. I promise. Just remind me but.


How long am i like this? I guess for few centuries, caught in this hole. 


Going nowhere,At times, I get waves of restless. You know what? These days, I don’t even think about anything.


I have been drained off all the thoughts, into a timeless space abyss.


I am sorry. I guess it is getting late for you. I need to pack up. I gotta go. After life awaits...


What were we talking about? Ah! Packing? Say it again.


I have nothing to pack. This country has taken everything out of me. Every thing, that could change. That could be given / taken away. Youth, energy, thoughts, willpower, everything, even my name…


In fact, I don't need a name here. I don't need it any more.


I have a hope of escaping the big pause button in this life, pressed by an invisible hand.


I only have hope! After everything is gone…


The hope shining bright and giving faith... After life, whatever be it is going to be better.


Thanks for the patience listening. I have been called out. Time to wind up.


Sorry! Sorry! I did not tell my name.


They called me "Mohammed Ajmal Ameer Kasab" here.

Monday, August 15, 2011

தலை மேல் தண்டவாளங்கள்

தடங்களில் செல்லும் நினைவு ரயில்கள்.
அதே பாதை ; அதே நினைவு ரயில்கள்.

சமயத்தில் ரயிலோடவும்
சமயத்தில் ரயில் ஓடவும்
வெகு தூரத்தில்; மிகவும் தூரத்தில்.
உணர்வில் மட்டும் ரயில் புலப்படும் தூரத்தில்.

ரயிலோட்டதின் நினைவு காற்று
முகத்தில் வருடும்/ அறையும்
நினைவின் வேகம் பொறுத்து ..

நினைவுகள் ரயிலை
காலம் இழுத்துச் செல்லும்
முன்னும் பின்னும்.
நினைவுகள் ரயில்
காலத்தை இழுத்துச் செல்லும்
முன்னும் பின்னும்.

ரயில் மட்டும் நிற்பதில்லை

ரயில் நல்லதா ? கெட்டதா?
இருப்புப்பாதையின் இருப்பை பொறுத்து.

தலையின் கீழ் தண்டவாளம்!
ஆக்ரோஷ ரயில் தட தடத்து
துண்டித்து மேல் ஏறிச் செல்லும் போது
விதிர்த்து எழுவதும் உண்டு.
தண்டவாளம் தலை கீழ் எப்போது வந்தது?

சுற்றிப்பார்க்க
தலை கவிழ்த்து
தண்டவாளம் தொலைக்க
தெருவெங்கும் மனிதர்கள்.
தினம் தினம் துண்டிப்பின் வலியுடன்.

கேட்கிறார் வேறு
ரயில் கொண்டு
ஏறு ரயில் நிறுத்த ஏலுமோ?

உபாயம் உரைப்பீரா?

Friday, August 05, 2011

athithi devo bhava

நான் கண் விழிக்கும் போது மனதில் குதூகலம் இருந்தது. கண் எதிரே நித்தமும் கண் விழிக்கும், கண் மூடும் வெள்ளைச்சுவர் .
எனக்கு இன்று விடுதலை கிடைக்கும் என தோன்றுகிறது. ஒரு வித உள்ளுணர்வு. விடுதலை பற்றிய சிந்தனை கொடுத்த குதூகலமா? தெரியாது.

எனக்கு எதுவும் தெரியாது. தெரிய தேவையும் இல்லை. திமிராக பேசுகிறேன் என்கிறீர்களா? அப்படிதான். நான் இப்படித்தான். உங்கள் ஆமோதிப்போ, எதிர்ப்போ எனக்கு தேவை இல்லை.

ஆ! நான் இப்போது யாரிடம் பேசிக்கொண்டு இருக்கிறேன்? உங்கள் பெயர் என்ன சொன்னீர்கள்? சாரி! எனக்கு காது செரியாக கேட்காது.. வயசாவுதுல்ல?

வயசு எவ்வளவுன்னு கேக்கறீங்களா? அதெல்லாம் கணக்கு வச்சுக்கிறதில்லை . ரொம்ப வயசாச்சு. அவ்ளோதான். சின்ன வயசு ஞாபகம் அப்போ அப்போ வந்து போகும்.. ஒரு கனவு போல .. கனவுல ..

அந்த ஒரு ராத்திரி.. ச்சே! நான் அதை கனவுன்னு தான் நம்பறேன் .. அது கனவு தானே?

நான் யாருன்னு கேக்கறீங்களா? சாரி! எனக்கு அதுவும் மறந்து போச்சு. ஞாபகம் வரும்போது சொல்றேன்.

எவ்ளோ நாளா இப்டி இருக்கேன்? தெரியலையே! . எனக்கென்னவோ பல யுகம் இப்டியே போனமாதிரி தான் இருக்கு ..போதும் போதும்னு அப்போப்போ தோணும்.. மனசோட வேகம் குறைந்து போய், மனசே இல்லாத ஒரு வெட்ட வெளி சூனியதுல்ல இருக்கேன். நேரம் காலம் எதுவும் இல்லாத ஒரு வெட்ட வெளி.

சாரி. உங்களுக்கு நேரம் ஆவுதுல்ல? சீக்கிரம் சொல்லி முடிச்சிடறேன். விடுதலைன்னு தெரிஞ்சதும் ஒரு பர பரப்பு வந்திருச்சு. யா ஹூ!

எங்கே விட்டோம்? என்ன பேசிட்டு இருந்தோம்? சரி விடு. இதற்கு மேல் என்னிடம் எடுக்க எதுவும் இல்லை. இந்த திருநாடும் காலமும் என்னிடம் இருந்த அத்தனையும் எடுத்து அழித்துவிட்டன,. என் அடையாளம் உட்பட.

இனிமேல் அழிக்க எதுவும் இல்லை. என்னிடம் ஒன்னும் இல்லைன்னு தெரியும். ஆனாலும் விட மாட்டாங்களாம்.

ஆனா நான் தப்பிக்கிறேன். ஏன்னா, கால கதவுகள் திறந்தே இருக்கின்றன. ஒரு வழிப்பாதையாக.. எனக்கு இப்போது தான் காலனின் வழியாக தெரிஞ்சுது.

இந்த வேஷம் கலைத்து வேறு ஒன்று கட்ட வேளை வந்தது.

எனக்கு கிடைத்த அத்தனைக்கும் நன்றி. நேரம் ஆச்சு. வரட்டா?

சாரி. நான் யாரென்று சொல்லலைல?

என்னை "முஹம்மது அஜ்மல் அமீர் கசாப்" என்று அழைத்தார்கள்.

Saturday, July 30, 2011

ஆடி அமாவாசை

சாயங்கால வெய்யில் சுள்ளென்று இருந்தது. சுலோச்சனா முதலியார் பாலத்தில் போக்குவரத்து இரைச்சலாக.

அப்பா என்ன சொல்கிறார் என்பதை கேட்க பக்கத்திலேயே இருந்தும் கூட, கூர்ந்து கேட்காவிட்டால் வார்த்தையை தொலைக்கும் அபாயம் இருந்தது. அப்பா பேச்செடுத்தார்.

"ஏலே. என்ன தான்லே முடிவு பண்ணிருக்க?"

"அதான் சொன்னேனேபா. ஆரம்பத்திலேர்ந்தே அதான் சொல்றேன். என்னோட முடிவுல ஒரு மாற்றமும் இல்லை. உங்க பதிலுக்கு தான் இவ்ளோ நாளா காத்திருக்கோம்."

"ஏலே. ஆச்சி ஒத்துக்காதுலே. நீ பாட்டுக்கு கோட்டிக்காரன் கணக்கா எல்லார் முன்னையும் போட்டு உடைச்சிட்டீல. பக்குவமா பேசி இருக்கணும்லா. இப்ப எல்லாருக்கும் தெரிஞ்சிட்டுல. "

" ..."

"ஆச்சி உன்கிட்ட பேசி ஒரு வாரம் ஆச்சில. உனக்கேன்னலே. நீ உன்பாட்டுக்கு வருசத்துக்கு ஒரு வாரம் வரே. நானில்ல இங்கன இவுக கூட இருக்கணும். பேசிப் பேசியே புண்ணாக்கிடுவாலே.நாலு வருஷம் மேல்படிப்பு படிக்கேன்னு போயிட்டு, போன சோலியதான பாக்கணும். எவளோ ஒரு கோட்டிச் சிறுக்கிய பாத்து பல்லிழிச்சு அவளதேன் கட்டுவேங்காம்னு எதிர் வீட்டுக்காரிட்ட புலம்புதால."

மத்தவுகளுக்கு என்னாலே சொல்லுவேன். இப்படி பண்ணிப்பிட்டியேலே? வந்து ஆற அமர ஆச்சி மனசறிஞ்சு மெதுவா, பக்குவமா சொல்லி இருக்கணும்ல."

அப்பாவின் ஆதங்கம் புரிந்தது. ஆற்றில் அவ்வளவாக நீரோட்டம் இல்லை. எருமைகளும் சிறுவர்களும் ஆற்றில் ஆடிக்கொண்டிருந்தனர். தூரே ஆற்றின் ஓரத்து மண்டபத்தில் ஒரு முதியவர் வேட்டி காய வைத்துக்கொண்டிருந்தார்.

வெற்றிச் செல்வி மனதில் வந்து போனாள். அவள் வாசம் கும்மென்று நினைத்தாலே என்ன என்னவோ செய்தது.
"செல்லம். எங்க வீட்டில ஒரு மாதிரி பேசி சமாளிச்சு சம்மதம் வாங்கிட்டேன்டா . அப்பாதான் முதல்ல முரண்டு புடிச்சார். அப்புறமா ஓகே சொல்லிட்டார். நீயும் உங்க வீட்டில பேசிடுடா. ரொம்ப நாளைக்கு இந்த மாதிரி ரிஸ்க் எடுக்க முடியாது. முப்பது நாள் ஆனா பக்கு பக்குன்னு இருக்குடா. ஊருக்கு போயிட்டு மறக்காம மெசேஜ் அனுப்புடா. உம்மா உம்மா..............."

"சங்கர் ... சங்கர். ஏலே உன்னதான்."

"சொல்லுங்கப்பா."

"அவுக என்ன ஆளுகன்னு சொன்ன?"

........ சொன்னேன்.

"ஏலே. போன லீவுல உங்க ஆபீஸ் குரூப்பு கூட குத்தாலம் பாக்க வந்தப்ப இந்த பிள்ளையும் இருந்திச்சில்ல?"

அப்பா என்பதை விடவும் எனது நண்பர் என்றே சொல்லலாம். மிக மிக பக்குவமானவர். நிதானம்+ அமைதி =அப்பா. கூட்டு குடும்பமானாலும் அவரவர் விருப்பங்களைக் குறிப்பறிந்து செய்வார். வீட்டில் ஆச்சிக்கு அப்புறம் அவர் சொல்லுக்கு மறு சொல் இல்லை.

"ஆமாப்பா. அம்மா, ஆச்சி கூட எல்லாம் போட்டோ எடுத்திச்சில. நெட்டையா, ஒல்லியா ... அம்மைக்கு கூட டீ எல்லாம் போட்டு கொடுத்திச்சில.. அதேன்."

"நீ வெச்சிருக்கிற போட்டோ ல வேற மாதிரி இருந்திச்சா.. அதாம்லே ஐயம்...."

ஞனஞனஞனஞனஞனஞனஞன என பெரும் சத்தம் வந்தது.

"அப்பா. ஓரமா வா. மேல எங்கனயாச்சும் எத்திற போவுறான்"

"சரில. அவுக வீட்டில பேசலாம். நம்ம ஆளுக யாரை எல்லாம் கூப்பிட்டுக்கலாம்?"

சரியாக கேட்கவில்லை. ஞனஞனஞனஞனஞனஞனஞன.

"கேக்கல அப்பா"

திரும்பவும் ஒரு முறை சொன்னார்.

இரைந்தேன். "ரமா கிட்டயும் கேட்டுக்கலாம்".

ஞனஞனஞனஞனஞனஞனஞன.

"யாரு?"

ரமா. ரமா! ரமா ஆஆஆ "

ஞனஞனஞனஞனஞனஞனஞன சத்தம் கடந்து சட்டென நின்றது. திரும்ப அப்பாவை பார்த்தேன். ஒரு மாதிரி முனிசிபாலிட்டி கொசு வண்டிப் புகை மாதிரி அடர்ந்த புகை நடுவே நின்றுக் கொண்டிருந்தார்.

"ஏண்ணா. ஏண்ணா. எழுந்திரிங்கோ. இன்னக்கி ஆடி அமாவாசை. சாஸ்திரிகள் வந்திடுவார். நேரமாச்சு. எழுந்திரிங்கோ. அலாரம் நான் தான் அணைச்சேன். ஜெய் தூங்கட்டும்." - ரமா. பத்து வருடமாக என் மனைவி!

கனவுக்கும் நனவுக்கும் இடையே ஒரு திரிசங்கு கணத்தில் தோன்றியது. ஏதோ ஒரு உலகில், சங்கரும் வெற்றிசெல்வியும் கல்யாணம் செய்து, அவர்கள் தாம்பத்திய வாழ்வில் இதே போல் கனவில் ரமாவோ அல்லது வேறு எதோ பெயருடனோ நான் வரவும் கூடும்.

கனவோ காட்சியோ, காண்பவர்களுக்கு மட்டுமே அது நிஜம். நாமும் தினம் தினம், நமக்கே நமக்காய் நமது பிரபஞ்சத்தை தோற்றுவித்து, மாற்றி அமைத்து, தெரிந்தோ தெரியாமலோ அழித்தும் விடுகிறோம். நமக்கு நாமே பிரம்மா, விஷ்ணு, சிவன். அஹம் பிரம்மாஸ்மி.

Thursday, April 21, 2011

"Nadunisi Naigal" Movie review - "Who let the dogs out? Who? Who?

Curiosity killed the cat. ஆர்வ கோளாறு. அவ்வளவு தான். எல்லா பிலாகுகளிலும் இந்த காய்ச்சு காய்ச்சுகிற அளவுக்கு படத்தை எப்படி எடுத்து (அ) கெடுத்து இருக்கிறார் என்ற ஆர்வ கோளாறில் படம் தேடி பிடித்து தரவிறக்கம் செய்தேன் - படத்தின் அலை சுத்தமாய் ஓய்ந்து அடங்கியபின்.

இதோ ஒரு முன் எச்சரிக்கை:

௧. படத்தின் கதையை நான் எழுத போவதில்லை. ஒரு விமர்சகரின் வேலை அல்ல அது என்பது எனது அபிப்பிராயம்.
கா. இணையத்தின் முகமற்ற சுதந்திரம் கொடுத்த *** கொழுப்பில் கௌதமையோ அவரது குடும்பத்தையோ திட்ட போவதில்லை.

எனக்கு படம் பிடித்திருந்தது. நேர்த்தியான ஒளிப்பதிவு தொழில் நுட்பம். பெரும் பாலும் கதையை அமைதியாய் நகர விடும் ஒலிப்பதிவு. மொத்த கதையும் ஒரே இரவில் நடக்கிறது. எனவே நிறைய இருட்டு காட்சிகள், படத்தின் இருளான கதைக்கு (dark themed story) துணையாக. கதைக்களம் தேர்ந்தெடுத்ததில் ஒரு வித்தியாசமான முயற்சி. போல்டாக என்று கூட சொல்லலாம். இமேஜ் பாராமல் கௌதம் குதித்திருக்கிறார். ஹீரோ என்று யாரும் தனியாக கிடையாது. ஹீரோயசம் சுத்தமாக இல்லாத ஒரு கதை. வீராவாக நடித்தவருக்கு முதல் படம் என்று சொல்லும்படியாக இல்லாமல், நன்றாக தனது பாத்திரம் உணர்ந்து, உள்வாங்கி நடித்திருக்கிறார். சமீரா ரெட்டிவும் தனது பங்கை நிறைவாகவே செய்து இருக்கிறார்.

now back to the furore:

இணையத்தில் இந்த அளவுக்கு குதி குதி என குதித்து கிழித்து எறிய வேண்டிய அவசியம் இல்லாத படம். 'ஏ' சர்டிபிகேட் கொடுத்த பின்னரும் கலாசார காவலர்கள் என்று சொல்லி கொள்பவர்கள் இந்த ஆட்டம் ஆட வேண்டியது இல்லை. கதைக்கு சம்பந்தமே இல்லாமல் வரும் குத்தாட்ட அழகிகள் ஏற்படுத்தாத சலனமா ந.நி.நா. ஏற்படுத்த போகிறது?
'ஏ' சர்டிபிகேட் 18 வயது வந்தவருக்கு மட்டும் அல்ல, மனதில் முதிர்ச்சி உள்ளவர்களுக்கு மட்டும் என்றும் கொள்ளலாம்.
மனதின் முதிர்ச்சிக்கு பதினெட்டு வயது ஒரு சரியான அளவு கோல் அல்ல, இவர்களை பொறுத்தவரை.

அனேகமாக 'ஏ' சென்டரில் மட்டும் ஓடி இருக்கலாம். ஏனெனில் ஆங்கில படங்களின் பாதிப்பு ஏராளம். முக்கியமாக christopher nolan's memento. நம்ம கஜினியின் மூல கதை எடுத்த இயக்குனர். இன்னும் பல ஆங்கில படங்கள் மற்றும் நம்ம ஊர் சிகப்பு ரோஜாக்கள் - இங்கொன்றும் அங்கொன்றுமாய் ஞாபகப்படுத்தியபடி .

படத்தின் கடைசியில் வரும் child abuse statistics படத்தின் முதலில் காட்டி இருந்தால், ஓரளவுக்கு படம் பார்ப்பவரை prepare பண்ணி இருக்கலாம்.

குழும கூடலில் ஈடுபடும் தந்தை. மகனையும் கூட இழுத்து குழிக்குள் (no pun intended) தள்ளுகிறார். திடும் என, வாழ்வில் நாம் தவிர்க்க பார்க்கும் நினைவுகள், நடப்புகள் திரை எதிரே விரிவது, shock value உண்டாக்குகிறது. நேர் கோடாக பார்த்து, பழகி, வாழ்ந்த வாழ்கையின் இடையில், இருளாகவும், கோணலாகவும், கற்பிதங்கள் சிதைவுறும் வண்ணம் அமைந்த கதைக்களன் மனதில் ஒரு அவஸ்தையை உண்டாக்குகிறது. சில காட்சிகள் இப்படியும் நடக்குமா, நடந்திருக்குமா என பார்வையாளராய் சிந்திக்க வைக்கிறது. இயக்குனரும் அதை தானே எதிர்பார்த்திருப்பார்?

வளர்த்த கடாவே பாயில் பாய்வது மீனாட்சி கதாபாத்திரத்துக்கு அதிர்ச்சி. அவர் அதை மௌனமாய் ஏற்றுக்கொள்வது, கதாபாத்திரத்தின் புனைப்பில் உள்ள finer undercurrent emotions ஐ காட்டுகிறது.
Relationships எல்லாம் நேராக இல்லாமல் 'முன்னே பின்னே' இருக்கிற உறவுகள் சமூகத்தில் தான் எத்தனை?

மெதுமெதுவே மன நிலை பிறழும் வீரா, multi-personality disorder, சமர் தரப்பு நியாயங்களும், சமரின் நடவடிக்கைகளால் வீரா மனதை திருப்தி படுத்திக்கொள்ள உருவாக்கிக்கொள்ளும் சமாதானங்களும் சரி வர சொல்லப்படவில்லை. கதாபாத்திரங்களின் ஆழம், மற்றும் போராட்டம், அந்நியனில் சொல்லிய அளவு கூட ந.நி.நா. களில் சொல்லப்படவில்லை. குணாதிசயங்கள் மேலோட்டமாகவே சொல்லிப் போவது கதையின் வேகம் கருதி என்ற சமாதானமா, தெரியவில்லை?

இன்னது, இவ்விதம் என்று முழுவதும் சொல்லாமல் பார்வையாளர் interpretations க்கு வேண்டும் என்றே நிறைய இடங்களில் iconic reference ஆக விட்டிருக்கிறார்.(உதா) தலை முடி கேட்கும் மீனாட்சி கேரக்டர்.

இவ்விதம் இந்த படமும் கௌதம் மேனன் ஸ்டைலில், அதாவது, ஒன்றிரண்டு கதாபத்திரங்களின் மிகப் பக்கத்தில் பார்வையாளரை கொண்டு சென்று, கதையை unidimensional இல் சொல்லும் உத்தியில் உள்ளது. இதையே விசுவலாகவும், நிறைய tight closeup காட்சிகள் மூலம் காட்டுகிறார். கௌதமின் வெற்றிக்கும் (உதாரணம்: காக்க காக்க, விண்ணை தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடு) தோல்விக்கும் (உதாரணம்: வாரணம் ஆயிரம், பச்சை கிளி முத்துச்சரம்) இந்த உத்தியின் intensity யே காரணம். பார்வையாளர்கள், இயக்குனரின் மன ஓட்டத்தில் இயைந்து பார்த்தால் படம் வெற்றியாகவும் இல்லையென்றால் பெரும் தோல்வியாகவும் அமைகிறது.

மற்ற படி, இந்த படம் ஒரு ஆதர்ச கதாநாயகனின் கதை அல்ல.
எந்த ஒரு மசாலாவின் மிக்சும் இல்லை. (டூயட், குத்துப்பாட்டு, கயிறு கட்டி மேலே தூக்கி போடும் சண்டை காட்சிகள், வெளிநாட்டு படப்பிடிப்பு, வீராப்பு வசனங்கள்...)
காமெடி இல்லை

ஆதர்ச கதாநாயகன், மசாலா, காமெடி என்ற மாதிரி எதிர்பார்ப்பில் திரைப் படம் அணுகுபவர்கள் தயவு செய்து விஜய் படம் மட்டும் பார்க்கவும்.
பாலா, கௌதம், மிஷ்கின், படங்கள் அல்ல.

Tuesday, March 15, 2011

Marathon, the mind sport

In and out
Deeper and deeper
Breathe moving in rhythm
That is wind instrument...

Pounding heart and foot
There goes the percussion

Sweat
Heat
Life brought alive
And moving..

Nervous energy
Brings string instrument

A running Human
Is a symphony

A symphony
Not by many

A symphony
By me vs. me!

Enough
Enough
Slow down
Stop! please!
Not any more
Drags down the mind

Fatigue
Pain
The Wall
Boredom are
the mind's friends

Just do it
Just once
With auto suggestions
I cajole


Training
Target
Contest
Travel
Smell of success
Visualization of victory
are the other friends..

Me Vs Myself
The Marathon
Is a game of chess

I am the board
I am the pieces
I checkmate myself

I am the game
I am the applause
I am the reward

Life is a sport
Or
Sport is Life?

Whatever

I keep running

Friday, March 11, 2011

Questions

1. When does the Child get the awareness, that the reflection in the mirror is its own, and not someone else's?

2. How does the kid translate the alphabets from an object frame of reference to alphabetic reference? For example, "A for Apple" is understood as A is an apple - big,shiny, juicy fruit.
How does the kid unlearn?

3. How do we get into the Maayaa that we are going to live in this world forever and silently suffer through delayed gratification. Just look around. There are lasting monuments, buildings, investment plans for which we pay heavy EMI through the nose / ass ... Is it how we are designed?

4. Why is the crime rate so low, as against the wide gap of haves and the have nots? What is holding back the society of several million have nots from robbing the haves? (I am amazed at the integrity and honesty of people, who have had very little education, poor upbringing and economically poor lifestyle. Is it hardwired?

5. from where does the "right" and "wrong" come? Is it the mind? If so, which part of the mind - conscious/ sub-conscious / unconscious mind? or is it a function of the spirit/ soul?

pARADOx

* Banks opening zero balance accounts for people who do not actually need them

* Special offers only to the people who can very well afford full price.

* Special offers, Discount sale, bonanza sales in upmarket malls to attract the people who are mentally very poor - people with a craving to have more than what is actually needed.

* Grains rotting in warehouses and the population going to sleep hungry.

* We expect to be loved truly, but do not give enough unconditionally.

* Hoarders and gluttons are worshipped and looked with amazement and as role models.

* Luxury redefined as the affordability to waste, unscrupulously.

* Media behaving like scavenging animals - trying to get upclose into the personal life of people they don't care a dime.

* Law of conservation of media energy: what goes up with media attention, comes down with equally fervent media attention. The higher the fall, wider the coverage.

* Why do WAGs of European footballers have to spend on PR space in India? Who cares a damn about Cheryl Cole or Eva Longaria in India?

* The Tax payer is never asked where the money is needed to be spent

* The voters who bring the party to power, is not the best economical contributors to the Government.

* Small fry Politician of every state breaking their own state Buses and infrastructure to protest.


* Why can not the politicians, not produce within their own clan, party another Shivaji Maharaj, who at his time had the courage, bravery and skills to take on mighty Mughals?