Monday, May 27, 2013

காதல்=கடவுள்


காதல்

புவியின் இரு திக்குகளில்
இணை கோடுகளாய்
அவரவர் வாழ்வில் விரைகிறோம்.

விழைகிறோம்
இணை கோடுகள் கூடும் என்று ..

பிரிந்த பின்
இணை கோடுகள் கூடுவது
தொடுவானில் மட்டுமே.
தொடுவானமோ வெகு தூரம்.

தொட்டு விடும் தூரத்தில் நின்று
என் வலைத் தோட்டத்தில்
கண் படாது உலவுகிறாய்.

உணர்வுகள்
உறவுகள்
புரிதல்கள்
கண்ணீர், கவலை
இன்பம்
குழந்தை என
என்னில் அடங்கா
எண்ணக் குவியல்களின்
நட்ட நடுவே
அன்பென்று
துடித்துக் கொண்டிருப்பது
மட்டும்
நீ விட்டுச் சென்ற இதயம்.

கடவுள்

புவியின் இரு திக்குகளில்
இணை கோடுகளாய்
அவரவர் வாழ்வில் விரைகிறோம்.

விழைகிறோம்
இணை கோடுகள் கூடும் என்று ..

பிரிந்த பின்
இணை கோடுகள் கூடுவது
தொடுவானில் மட்டுமே.
தொடுவானமோ வெகு தூரம்.

தொட்டு விடும் தூரத்தில் நின்று
என் மனத்  தோட்டத்தில்
கண் படாது உலவுகிறாய்.

உணர்வுகள்
உறவுகள்
புரிதல்கள்
கண்ணீர், கவலை
இன்பம்
குழந்தை என
என்னில் அடங்கா
எண்ணக் குவியல்களின்
நட்ட நடுவே
அன்பெ சிவமென்று
துடித்துக் கொண்டிருக்க,
நீர் விட்டுச் சென்ற இதயம்.

Sunday, May 12, 2013

இதயம் மட்டும் இங்கே துடிக்கிறது!


ரயிலில் பயணிக்கும் குடும்பம்.
வெயில் கால விடுமுறைக்கு.
4 மாதம் முன்னால் பதிவு
செய்த குளிரூட்டப்பட்ட இருக்கைகள்.

பெட்டியின் ஜன்னல் ஓரம்
கம்பியில் முகம் புதைத்து
கைப் பிடித்து
கண்களோடு கண்கள்
கலந்து
கலங்கி
சொல்ல நினைத்தவை
வார்த்தை வராது
கைப்பிடியின் இறுக்கத்தில்
ஒரு வாழ் நாளின்
அன்பைப் பரிமாறி 
மெதுவே 
நகரும் ரயிலுடன்
நகர்ந்து கண் மறையும்
வரை
கை அசைத்து...

ஏசி 2 டயரில்
இப்படி எதுவும் நடக்கவில்லை! :(

கருப்புக் கண்ணாடியின்
அந்த பக்கம் அவளும்
இந்தப் பக்கம் நானுமாய்
மொத்தமாய்
மறைந்து, பிரிந்து
பேச முடியாமல், பார்க்க முடியாமல்
சொல்லாது விட்ட
ஏராளமான கவிதைகள் 
ஏந்தி
இதயம் மட்டும்
இங்கே துடிக்கிறது.