Sunday, March 28, 2010

நினைவுகளாய் காலம்..

நினைவுகளாய் காலம்..
வலியில் விழிக்கிறேன்
கண்ணீர் கழுவிச் செல்கிறது
கலந்த காலம்
கடந்த காலம்.

கனவு பட்டங்களில் பறக்கிறேன் -
நூலேணி நினைவுகள் நீளத்திற்கு.
கண்கள் பழகாத உயரத்திற்கு

விரையும் மேகங்கள்
சொல்லிச் செல்லும்
வருவது சுழல்காற்றுடன்
அடைமழை.

நூலேணி நினைவுகள்
நீள நீள
கனவு பட்டம்
தொட விழையும்
கருவானில்
ஒரு வானவில்.
-- விஷ்வேஷ்வரன்

நினைவெல்லாம் நித்யா

நினைவெல்லாம் நித்யா

கதவை திற
காற்று வரட்டும்.

திறந்த கதவில்
நுழைந்தது
நாடோடித் தென்றல்.

மறந்தது நிதானம்
ஜன்னல் வழியே
பறந்தது ஆனந்தம்.

first poetry written along with significant contribution from my wife bhuvana