Friday, November 12, 2010

கிருஷ்ணா நீ பேகனே வாராயோ ?

அதிர்வாணத்தில்
வாகனங்கள் கதறும்
நாய் பூனை புறா காகங்கள்
படபடத்து பயத்தில் பதுங்கும்
ஒவ்வொரு வெடிச்சிதரளும்
உடல்நலம் குன்றியவர்
இருதயம், காது ஜவ்வு
பிழிந்து வலி எடுக்கும்.

ஆஸ்துமா நோயுற்றவர்
கழுத்து நெரித்து
உயிர் திருகும்
யாரும் வேண்டாத வெடிப்புகை.

காலடியில் திடுமென
வெடித்துப் பதற
வைத்தவன்
வைதவனைப் பார்த்து சிரிக்கிறான்.

குடியும் 'குடி'தனமுமாய்
நரகாசுரர் கூட்டம் நடுவே..

தீப ஒளி எங்கே - அகமும் புறமும்?
கிருஷ்ணா நீ பேகனே வாராயோ ?

அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது ..

ஒரு மூலையில் மனிதர்
பசியில் வாடிச் சாக
வளர்ப்பு அல்சேஷன் தினம் தின்னும்
அரை கிலோ கறி ஒரு லிட்டர் பால்.
மேதகு மனித வாழ்வுக்கு
நாயே மேல்!

மழையிலும் வெய்யிலும் வாட்டி வதக்க
மலையும் மலை சார்ந்த மக்களும்
புகையும் புழுதியுமான
புறா கூட்டு பொருளாதாரத்துக்கு தடையாம்
துரத்து! துரத்து!

முன்னோரிட்ட வினை
கண்ணி விதைத்த கழனிகளில்
பயிராகுது கட்டை கால்கள்.

எரிவாயு, எண்ணெய்
கனிமங்கள் குடைந்தெடுக்க
உலகின் ஒரு கோடியிலிருந்து
ஓடி வந்து
படையெடுத்து அழிப்பார்
பல்லாயிரம் ஜனங்களை.

கேட்கப்படும் கேள்வி
ஒன்னே ஒன்னு
"எனக்கு எவ்வளவு?

Monday, November 08, 2010

superstar

விதி தூக்கி சென்றது
கனவில் எட்டாத உயரம்
ஆரம்ப கிறுகிறுப்பு பழகி
உயரம் உணரா உயரம்...

நான் ஒரு திகழும் நட்சத்திரம்
என்னைச் சுற்றும்
எனக்கு திகட்டி தவிர்க்கும்
விண்மீன் கூட்டம்.

நான் ஒரு நிகழ்கால அதிசயம்
தலை அசைப்பில் ஆயிரம் நிகழும்
பயம் மரியாதை எல்லாம்
என்னை கணிக்கதவரை
நான் கவனிக்காதவரை
சொல்லாத ஒரு வார்த்தைக்காக

சாலையில் என்னைப் பார்ப்பவர்
விழி விரியும்
இதயம் எகிறும்
பார்த்தவருக்கே பரவசம்
ஆண்டவனே என்பவரும் உண்டு.

சதா
வெளிச்சத்திற்கு மத்தியில்
ப்ரோடோகோல் போர்வையுள்

ஓடோடி நானும் தேடுகிறேன்
விடுதலையின் வழி
விடு தளையின் வழி
என்னுள் அகழ்கிறேன்
நான் வந்த காரணம்.

பொய்மை துறந்து
புறம் அவிழ்த்து
தவிப்பிர்க்கொரு தீர்ப்பு தேடி
நிர்வாணநா(யா)ய் அலைவேன்,
ஆர் கண்ணில் படாது
ஆயிரம் காதங்களுக்கப்பால்

புகழின் புழுக்கத்தில்
மறைந்து போனதென் நிர்வாணம்.

அறிவேன் நான்
விளக்கு விலக்கி
வேகமாய் ஓடும்
ஒரு வினோத விட்டில்.