Saturday, November 26, 2011

TOI 2020: The oldest inmate in Arthur Road Jail dies in sleep.

THE NIGHT BEFORE ...


When I woke up, I was happy and excited. It seemed the white walled room seemed to radiate my happiness. Was it looking whiter than before?


Is today the day of my release? Freedom, at last? I don’t know.


I was promised of Jannat many many years ago. The time has come now, I believe.


I was saying F .. R .. E.. E .. D.. O.. M, letter by letter. It tasted sweet in the throat.
I laughed.. I was saying FREEDOM, FREEDOM, FREEDOM.. It sounded silly.. I was laughing my a** off.


Is it the day of freedom? I don't know. Rather I don't care....


You think I am showing an attitude?? I care a damn. That is the way I am. You should have seen me during my youth. I would have cussed you enough to pull puss out of your ears.


Hey! Hang on. Who are you? 


Do I know you? Sorry, I did not register your name, if you had said.


What did you say? 


I have a hearing problem. Am getting old nah?


Are you asking how old I am..


I don't know.. I don't count. 


I am very old, too old to count.. I forget what I was counting half way.


Rarely do I get the dreams of my youth - Happy and unhappy days in Punjab, as a distant dream.. A fading dream..


There is that one night, i want to forget. Perhaps I would have forgotten but that keeps recurring as a dream. I strongly believe that the night itself was only a dream.

I keep hearing the voices - Few young voices I did not remember hearing during that night, but they always appear in the dream.. trembling voices, shrill and begging for life. 


Who am I to amend the dream ..


Who am I? Ah! Did I did not tell you?


Who WAS I? I don't remember. When I remember I will tell you. I promise. Just remind me but.


How long am i like this? I guess for few centuries, caught in this hole. 


Going nowhere,At times, I get waves of restless. You know what? These days, I don’t even think about anything.


I have been drained off all the thoughts, into a timeless space abyss.


I am sorry. I guess it is getting late for you. I need to pack up. I gotta go. After life awaits...


What were we talking about? Ah! Packing? Say it again.


I have nothing to pack. This country has taken everything out of me. Every thing, that could change. That could be given / taken away. Youth, energy, thoughts, willpower, everything, even my name…


In fact, I don't need a name here. I don't need it any more.


I have a hope of escaping the big pause button in this life, pressed by an invisible hand.


I only have hope! After everything is gone…


The hope shining bright and giving faith... After life, whatever be it is going to be better.


Thanks for the patience listening. I have been called out. Time to wind up.


Sorry! Sorry! I did not tell my name.


They called me "Mohammed Ajmal Ameer Kasab" here.

Monday, August 15, 2011

தலை மேல் தண்டவாளங்கள்

தடங்களில் செல்லும் நினைவு ரயில்கள்.
அதே பாதை ; அதே நினைவு ரயில்கள்.

சமயத்தில் ரயிலோடவும்
சமயத்தில் ரயில் ஓடவும்
வெகு தூரத்தில்; மிகவும் தூரத்தில்.
உணர்வில் மட்டும் ரயில் புலப்படும் தூரத்தில்.

ரயிலோட்டதின் நினைவு காற்று
முகத்தில் வருடும்/ அறையும்
நினைவின் வேகம் பொறுத்து ..

நினைவுகள் ரயிலை
காலம் இழுத்துச் செல்லும்
முன்னும் பின்னும்.
நினைவுகள் ரயில்
காலத்தை இழுத்துச் செல்லும்
முன்னும் பின்னும்.

ரயில் மட்டும் நிற்பதில்லை

ரயில் நல்லதா ? கெட்டதா?
இருப்புப்பாதையின் இருப்பை பொறுத்து.

தலையின் கீழ் தண்டவாளம்!
ஆக்ரோஷ ரயில் தட தடத்து
துண்டித்து மேல் ஏறிச் செல்லும் போது
விதிர்த்து எழுவதும் உண்டு.
தண்டவாளம் தலை கீழ் எப்போது வந்தது?

சுற்றிப்பார்க்க
தலை கவிழ்த்து
தண்டவாளம் தொலைக்க
தெருவெங்கும் மனிதர்கள்.
தினம் தினம் துண்டிப்பின் வலியுடன்.

கேட்கிறார் வேறு
ரயில் கொண்டு
ஏறு ரயில் நிறுத்த ஏலுமோ?

உபாயம் உரைப்பீரா?

Friday, August 05, 2011

athithi devo bhava

நான் கண் விழிக்கும் போது மனதில் குதூகலம் இருந்தது. கண் எதிரே நித்தமும் கண் விழிக்கும், கண் மூடும் வெள்ளைச்சுவர் .
எனக்கு இன்று விடுதலை கிடைக்கும் என தோன்றுகிறது. ஒரு வித உள்ளுணர்வு. விடுதலை பற்றிய சிந்தனை கொடுத்த குதூகலமா? தெரியாது.

எனக்கு எதுவும் தெரியாது. தெரிய தேவையும் இல்லை. திமிராக பேசுகிறேன் என்கிறீர்களா? அப்படிதான். நான் இப்படித்தான். உங்கள் ஆமோதிப்போ, எதிர்ப்போ எனக்கு தேவை இல்லை.

ஆ! நான் இப்போது யாரிடம் பேசிக்கொண்டு இருக்கிறேன்? உங்கள் பெயர் என்ன சொன்னீர்கள்? சாரி! எனக்கு காது செரியாக கேட்காது.. வயசாவுதுல்ல?

வயசு எவ்வளவுன்னு கேக்கறீங்களா? அதெல்லாம் கணக்கு வச்சுக்கிறதில்லை . ரொம்ப வயசாச்சு. அவ்ளோதான். சின்ன வயசு ஞாபகம் அப்போ அப்போ வந்து போகும்.. ஒரு கனவு போல .. கனவுல ..

அந்த ஒரு ராத்திரி.. ச்சே! நான் அதை கனவுன்னு தான் நம்பறேன் .. அது கனவு தானே?

நான் யாருன்னு கேக்கறீங்களா? சாரி! எனக்கு அதுவும் மறந்து போச்சு. ஞாபகம் வரும்போது சொல்றேன்.

எவ்ளோ நாளா இப்டி இருக்கேன்? தெரியலையே! . எனக்கென்னவோ பல யுகம் இப்டியே போனமாதிரி தான் இருக்கு ..போதும் போதும்னு அப்போப்போ தோணும்.. மனசோட வேகம் குறைந்து போய், மனசே இல்லாத ஒரு வெட்ட வெளி சூனியதுல்ல இருக்கேன். நேரம் காலம் எதுவும் இல்லாத ஒரு வெட்ட வெளி.

சாரி. உங்களுக்கு நேரம் ஆவுதுல்ல? சீக்கிரம் சொல்லி முடிச்சிடறேன். விடுதலைன்னு தெரிஞ்சதும் ஒரு பர பரப்பு வந்திருச்சு. யா ஹூ!

எங்கே விட்டோம்? என்ன பேசிட்டு இருந்தோம்? சரி விடு. இதற்கு மேல் என்னிடம் எடுக்க எதுவும் இல்லை. இந்த திருநாடும் காலமும் என்னிடம் இருந்த அத்தனையும் எடுத்து அழித்துவிட்டன,. என் அடையாளம் உட்பட.

இனிமேல் அழிக்க எதுவும் இல்லை. என்னிடம் ஒன்னும் இல்லைன்னு தெரியும். ஆனாலும் விட மாட்டாங்களாம்.

ஆனா நான் தப்பிக்கிறேன். ஏன்னா, கால கதவுகள் திறந்தே இருக்கின்றன. ஒரு வழிப்பாதையாக.. எனக்கு இப்போது தான் காலனின் வழியாக தெரிஞ்சுது.

இந்த வேஷம் கலைத்து வேறு ஒன்று கட்ட வேளை வந்தது.

எனக்கு கிடைத்த அத்தனைக்கும் நன்றி. நேரம் ஆச்சு. வரட்டா?

சாரி. நான் யாரென்று சொல்லலைல?

என்னை "முஹம்மது அஜ்மல் அமீர் கசாப்" என்று அழைத்தார்கள்.

Saturday, July 30, 2011

ஆடி அமாவாசை

சாயங்கால வெய்யில் சுள்ளென்று இருந்தது. சுலோச்சனா முதலியார் பாலத்தில் போக்குவரத்து இரைச்சலாக.

அப்பா என்ன சொல்கிறார் என்பதை கேட்க பக்கத்திலேயே இருந்தும் கூட, கூர்ந்து கேட்காவிட்டால் வார்த்தையை தொலைக்கும் அபாயம் இருந்தது. அப்பா பேச்செடுத்தார்.

"ஏலே. என்ன தான்லே முடிவு பண்ணிருக்க?"

"அதான் சொன்னேனேபா. ஆரம்பத்திலேர்ந்தே அதான் சொல்றேன். என்னோட முடிவுல ஒரு மாற்றமும் இல்லை. உங்க பதிலுக்கு தான் இவ்ளோ நாளா காத்திருக்கோம்."

"ஏலே. ஆச்சி ஒத்துக்காதுலே. நீ பாட்டுக்கு கோட்டிக்காரன் கணக்கா எல்லார் முன்னையும் போட்டு உடைச்சிட்டீல. பக்குவமா பேசி இருக்கணும்லா. இப்ப எல்லாருக்கும் தெரிஞ்சிட்டுல. "

" ..."

"ஆச்சி உன்கிட்ட பேசி ஒரு வாரம் ஆச்சில. உனக்கேன்னலே. நீ உன்பாட்டுக்கு வருசத்துக்கு ஒரு வாரம் வரே. நானில்ல இங்கன இவுக கூட இருக்கணும். பேசிப் பேசியே புண்ணாக்கிடுவாலே.நாலு வருஷம் மேல்படிப்பு படிக்கேன்னு போயிட்டு, போன சோலியதான பாக்கணும். எவளோ ஒரு கோட்டிச் சிறுக்கிய பாத்து பல்லிழிச்சு அவளதேன் கட்டுவேங்காம்னு எதிர் வீட்டுக்காரிட்ட புலம்புதால."

மத்தவுகளுக்கு என்னாலே சொல்லுவேன். இப்படி பண்ணிப்பிட்டியேலே? வந்து ஆற அமர ஆச்சி மனசறிஞ்சு மெதுவா, பக்குவமா சொல்லி இருக்கணும்ல."

அப்பாவின் ஆதங்கம் புரிந்தது. ஆற்றில் அவ்வளவாக நீரோட்டம் இல்லை. எருமைகளும் சிறுவர்களும் ஆற்றில் ஆடிக்கொண்டிருந்தனர். தூரே ஆற்றின் ஓரத்து மண்டபத்தில் ஒரு முதியவர் வேட்டி காய வைத்துக்கொண்டிருந்தார்.

வெற்றிச் செல்வி மனதில் வந்து போனாள். அவள் வாசம் கும்மென்று நினைத்தாலே என்ன என்னவோ செய்தது.
"செல்லம். எங்க வீட்டில ஒரு மாதிரி பேசி சமாளிச்சு சம்மதம் வாங்கிட்டேன்டா . அப்பாதான் முதல்ல முரண்டு புடிச்சார். அப்புறமா ஓகே சொல்லிட்டார். நீயும் உங்க வீட்டில பேசிடுடா. ரொம்ப நாளைக்கு இந்த மாதிரி ரிஸ்க் எடுக்க முடியாது. முப்பது நாள் ஆனா பக்கு பக்குன்னு இருக்குடா. ஊருக்கு போயிட்டு மறக்காம மெசேஜ் அனுப்புடா. உம்மா உம்மா..............."

"சங்கர் ... சங்கர். ஏலே உன்னதான்."

"சொல்லுங்கப்பா."

"அவுக என்ன ஆளுகன்னு சொன்ன?"

........ சொன்னேன்.

"ஏலே. போன லீவுல உங்க ஆபீஸ் குரூப்பு கூட குத்தாலம் பாக்க வந்தப்ப இந்த பிள்ளையும் இருந்திச்சில்ல?"

அப்பா என்பதை விடவும் எனது நண்பர் என்றே சொல்லலாம். மிக மிக பக்குவமானவர். நிதானம்+ அமைதி =அப்பா. கூட்டு குடும்பமானாலும் அவரவர் விருப்பங்களைக் குறிப்பறிந்து செய்வார். வீட்டில் ஆச்சிக்கு அப்புறம் அவர் சொல்லுக்கு மறு சொல் இல்லை.

"ஆமாப்பா. அம்மா, ஆச்சி கூட எல்லாம் போட்டோ எடுத்திச்சில. நெட்டையா, ஒல்லியா ... அம்மைக்கு கூட டீ எல்லாம் போட்டு கொடுத்திச்சில.. அதேன்."

"நீ வெச்சிருக்கிற போட்டோ ல வேற மாதிரி இருந்திச்சா.. அதாம்லே ஐயம்...."

ஞனஞனஞனஞனஞனஞனஞன என பெரும் சத்தம் வந்தது.

"அப்பா. ஓரமா வா. மேல எங்கனயாச்சும் எத்திற போவுறான்"

"சரில. அவுக வீட்டில பேசலாம். நம்ம ஆளுக யாரை எல்லாம் கூப்பிட்டுக்கலாம்?"

சரியாக கேட்கவில்லை. ஞனஞனஞனஞனஞனஞனஞன.

"கேக்கல அப்பா"

திரும்பவும் ஒரு முறை சொன்னார்.

இரைந்தேன். "ரமா கிட்டயும் கேட்டுக்கலாம்".

ஞனஞனஞனஞனஞனஞனஞன.

"யாரு?"

ரமா. ரமா! ரமா ஆஆஆ "

ஞனஞனஞனஞனஞனஞனஞன சத்தம் கடந்து சட்டென நின்றது. திரும்ப அப்பாவை பார்த்தேன். ஒரு மாதிரி முனிசிபாலிட்டி கொசு வண்டிப் புகை மாதிரி அடர்ந்த புகை நடுவே நின்றுக் கொண்டிருந்தார்.

"ஏண்ணா. ஏண்ணா. எழுந்திரிங்கோ. இன்னக்கி ஆடி அமாவாசை. சாஸ்திரிகள் வந்திடுவார். நேரமாச்சு. எழுந்திரிங்கோ. அலாரம் நான் தான் அணைச்சேன். ஜெய் தூங்கட்டும்." - ரமா. பத்து வருடமாக என் மனைவி!

கனவுக்கும் நனவுக்கும் இடையே ஒரு திரிசங்கு கணத்தில் தோன்றியது. ஏதோ ஒரு உலகில், சங்கரும் வெற்றிசெல்வியும் கல்யாணம் செய்து, அவர்கள் தாம்பத்திய வாழ்வில் இதே போல் கனவில் ரமாவோ அல்லது வேறு எதோ பெயருடனோ நான் வரவும் கூடும்.

கனவோ காட்சியோ, காண்பவர்களுக்கு மட்டுமே அது நிஜம். நாமும் தினம் தினம், நமக்கே நமக்காய் நமது பிரபஞ்சத்தை தோற்றுவித்து, மாற்றி அமைத்து, தெரிந்தோ தெரியாமலோ அழித்தும் விடுகிறோம். நமக்கு நாமே பிரம்மா, விஷ்ணு, சிவன். அஹம் பிரம்மாஸ்மி.

Thursday, April 21, 2011

"Nadunisi Naigal" Movie review - "Who let the dogs out? Who? Who?

Curiosity killed the cat. ஆர்வ கோளாறு. அவ்வளவு தான். எல்லா பிலாகுகளிலும் இந்த காய்ச்சு காய்ச்சுகிற அளவுக்கு படத்தை எப்படி எடுத்து (அ) கெடுத்து இருக்கிறார் என்ற ஆர்வ கோளாறில் படம் தேடி பிடித்து தரவிறக்கம் செய்தேன் - படத்தின் அலை சுத்தமாய் ஓய்ந்து அடங்கியபின்.

இதோ ஒரு முன் எச்சரிக்கை:

௧. படத்தின் கதையை நான் எழுத போவதில்லை. ஒரு விமர்சகரின் வேலை அல்ல அது என்பது எனது அபிப்பிராயம்.
கா. இணையத்தின் முகமற்ற சுதந்திரம் கொடுத்த *** கொழுப்பில் கௌதமையோ அவரது குடும்பத்தையோ திட்ட போவதில்லை.

எனக்கு படம் பிடித்திருந்தது. நேர்த்தியான ஒளிப்பதிவு தொழில் நுட்பம். பெரும் பாலும் கதையை அமைதியாய் நகர விடும் ஒலிப்பதிவு. மொத்த கதையும் ஒரே இரவில் நடக்கிறது. எனவே நிறைய இருட்டு காட்சிகள், படத்தின் இருளான கதைக்கு (dark themed story) துணையாக. கதைக்களம் தேர்ந்தெடுத்ததில் ஒரு வித்தியாசமான முயற்சி. போல்டாக என்று கூட சொல்லலாம். இமேஜ் பாராமல் கௌதம் குதித்திருக்கிறார். ஹீரோ என்று யாரும் தனியாக கிடையாது. ஹீரோயசம் சுத்தமாக இல்லாத ஒரு கதை. வீராவாக நடித்தவருக்கு முதல் படம் என்று சொல்லும்படியாக இல்லாமல், நன்றாக தனது பாத்திரம் உணர்ந்து, உள்வாங்கி நடித்திருக்கிறார். சமீரா ரெட்டிவும் தனது பங்கை நிறைவாகவே செய்து இருக்கிறார்.

now back to the furore:

இணையத்தில் இந்த அளவுக்கு குதி குதி என குதித்து கிழித்து எறிய வேண்டிய அவசியம் இல்லாத படம். 'ஏ' சர்டிபிகேட் கொடுத்த பின்னரும் கலாசார காவலர்கள் என்று சொல்லி கொள்பவர்கள் இந்த ஆட்டம் ஆட வேண்டியது இல்லை. கதைக்கு சம்பந்தமே இல்லாமல் வரும் குத்தாட்ட அழகிகள் ஏற்படுத்தாத சலனமா ந.நி.நா. ஏற்படுத்த போகிறது?
'ஏ' சர்டிபிகேட் 18 வயது வந்தவருக்கு மட்டும் அல்ல, மனதில் முதிர்ச்சி உள்ளவர்களுக்கு மட்டும் என்றும் கொள்ளலாம்.
மனதின் முதிர்ச்சிக்கு பதினெட்டு வயது ஒரு சரியான அளவு கோல் அல்ல, இவர்களை பொறுத்தவரை.

அனேகமாக 'ஏ' சென்டரில் மட்டும் ஓடி இருக்கலாம். ஏனெனில் ஆங்கில படங்களின் பாதிப்பு ஏராளம். முக்கியமாக christopher nolan's memento. நம்ம கஜினியின் மூல கதை எடுத்த இயக்குனர். இன்னும் பல ஆங்கில படங்கள் மற்றும் நம்ம ஊர் சிகப்பு ரோஜாக்கள் - இங்கொன்றும் அங்கொன்றுமாய் ஞாபகப்படுத்தியபடி .

படத்தின் கடைசியில் வரும் child abuse statistics படத்தின் முதலில் காட்டி இருந்தால், ஓரளவுக்கு படம் பார்ப்பவரை prepare பண்ணி இருக்கலாம்.

குழும கூடலில் ஈடுபடும் தந்தை. மகனையும் கூட இழுத்து குழிக்குள் (no pun intended) தள்ளுகிறார். திடும் என, வாழ்வில் நாம் தவிர்க்க பார்க்கும் நினைவுகள், நடப்புகள் திரை எதிரே விரிவது, shock value உண்டாக்குகிறது. நேர் கோடாக பார்த்து, பழகி, வாழ்ந்த வாழ்கையின் இடையில், இருளாகவும், கோணலாகவும், கற்பிதங்கள் சிதைவுறும் வண்ணம் அமைந்த கதைக்களன் மனதில் ஒரு அவஸ்தையை உண்டாக்குகிறது. சில காட்சிகள் இப்படியும் நடக்குமா, நடந்திருக்குமா என பார்வையாளராய் சிந்திக்க வைக்கிறது. இயக்குனரும் அதை தானே எதிர்பார்த்திருப்பார்?

வளர்த்த கடாவே பாயில் பாய்வது மீனாட்சி கதாபாத்திரத்துக்கு அதிர்ச்சி. அவர் அதை மௌனமாய் ஏற்றுக்கொள்வது, கதாபாத்திரத்தின் புனைப்பில் உள்ள finer undercurrent emotions ஐ காட்டுகிறது.
Relationships எல்லாம் நேராக இல்லாமல் 'முன்னே பின்னே' இருக்கிற உறவுகள் சமூகத்தில் தான் எத்தனை?

மெதுமெதுவே மன நிலை பிறழும் வீரா, multi-personality disorder, சமர் தரப்பு நியாயங்களும், சமரின் நடவடிக்கைகளால் வீரா மனதை திருப்தி படுத்திக்கொள்ள உருவாக்கிக்கொள்ளும் சமாதானங்களும் சரி வர சொல்லப்படவில்லை. கதாபாத்திரங்களின் ஆழம், மற்றும் போராட்டம், அந்நியனில் சொல்லிய அளவு கூட ந.நி.நா. களில் சொல்லப்படவில்லை. குணாதிசயங்கள் மேலோட்டமாகவே சொல்லிப் போவது கதையின் வேகம் கருதி என்ற சமாதானமா, தெரியவில்லை?

இன்னது, இவ்விதம் என்று முழுவதும் சொல்லாமல் பார்வையாளர் interpretations க்கு வேண்டும் என்றே நிறைய இடங்களில் iconic reference ஆக விட்டிருக்கிறார்.(உதா) தலை முடி கேட்கும் மீனாட்சி கேரக்டர்.

இவ்விதம் இந்த படமும் கௌதம் மேனன் ஸ்டைலில், அதாவது, ஒன்றிரண்டு கதாபத்திரங்களின் மிகப் பக்கத்தில் பார்வையாளரை கொண்டு சென்று, கதையை unidimensional இல் சொல்லும் உத்தியில் உள்ளது. இதையே விசுவலாகவும், நிறைய tight closeup காட்சிகள் மூலம் காட்டுகிறார். கௌதமின் வெற்றிக்கும் (உதாரணம்: காக்க காக்க, விண்ணை தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடு) தோல்விக்கும் (உதாரணம்: வாரணம் ஆயிரம், பச்சை கிளி முத்துச்சரம்) இந்த உத்தியின் intensity யே காரணம். பார்வையாளர்கள், இயக்குனரின் மன ஓட்டத்தில் இயைந்து பார்த்தால் படம் வெற்றியாகவும் இல்லையென்றால் பெரும் தோல்வியாகவும் அமைகிறது.

மற்ற படி, இந்த படம் ஒரு ஆதர்ச கதாநாயகனின் கதை அல்ல.
எந்த ஒரு மசாலாவின் மிக்சும் இல்லை. (டூயட், குத்துப்பாட்டு, கயிறு கட்டி மேலே தூக்கி போடும் சண்டை காட்சிகள், வெளிநாட்டு படப்பிடிப்பு, வீராப்பு வசனங்கள்...)
காமெடி இல்லை

ஆதர்ச கதாநாயகன், மசாலா, காமெடி என்ற மாதிரி எதிர்பார்ப்பில் திரைப் படம் அணுகுபவர்கள் தயவு செய்து விஜய் படம் மட்டும் பார்க்கவும்.
பாலா, கௌதம், மிஷ்கின், படங்கள் அல்ல.

Tuesday, March 15, 2011

Marathon, the mind sport

In and out
Deeper and deeper
Breathe moving in rhythm
That is wind instrument...

Pounding heart and foot
There goes the percussion

Sweat
Heat
Life brought alive
And moving..

Nervous energy
Brings string instrument

A running Human
Is a symphony

A symphony
Not by many

A symphony
By me vs. me!

Enough
Enough
Slow down
Stop! please!
Not any more
Drags down the mind

Fatigue
Pain
The Wall
Boredom are
the mind's friends

Just do it
Just once
With auto suggestions
I cajole


Training
Target
Contest
Travel
Smell of success
Visualization of victory
are the other friends..

Me Vs Myself
The Marathon
Is a game of chess

I am the board
I am the pieces
I checkmate myself

I am the game
I am the applause
I am the reward

Life is a sport
Or
Sport is Life?

Whatever

I keep running

Friday, March 11, 2011

Questions

1. When does the Child get the awareness, that the reflection in the mirror is its own, and not someone else's?

2. How does the kid translate the alphabets from an object frame of reference to alphabetic reference? For example, "A for Apple" is understood as A is an apple - big,shiny, juicy fruit.
How does the kid unlearn?

3. How do we get into the Maayaa that we are going to live in this world forever and silently suffer through delayed gratification. Just look around. There are lasting monuments, buildings, investment plans for which we pay heavy EMI through the nose / ass ... Is it how we are designed?

4. Why is the crime rate so low, as against the wide gap of haves and the have nots? What is holding back the society of several million have nots from robbing the haves? (I am amazed at the integrity and honesty of people, who have had very little education, poor upbringing and economically poor lifestyle. Is it hardwired?

5. from where does the "right" and "wrong" come? Is it the mind? If so, which part of the mind - conscious/ sub-conscious / unconscious mind? or is it a function of the spirit/ soul?

pARADOx

* Banks opening zero balance accounts for people who do not actually need them

* Special offers only to the people who can very well afford full price.

* Special offers, Discount sale, bonanza sales in upmarket malls to attract the people who are mentally very poor - people with a craving to have more than what is actually needed.

* Grains rotting in warehouses and the population going to sleep hungry.

* We expect to be loved truly, but do not give enough unconditionally.

* Hoarders and gluttons are worshipped and looked with amazement and as role models.

* Luxury redefined as the affordability to waste, unscrupulously.

* Media behaving like scavenging animals - trying to get upclose into the personal life of people they don't care a dime.

* Law of conservation of media energy: what goes up with media attention, comes down with equally fervent media attention. The higher the fall, wider the coverage.

* Why do WAGs of European footballers have to spend on PR space in India? Who cares a damn about Cheryl Cole or Eva Longaria in India?

* The Tax payer is never asked where the money is needed to be spent

* The voters who bring the party to power, is not the best economical contributors to the Government.

* Small fry Politician of every state breaking their own state Buses and infrastructure to protest.


* Why can not the politicians, not produce within their own clan, party another Shivaji Maharaj, who at his time had the courage, bravery and skills to take on mighty Mughals?