Monday, May 27, 2013

காதல்=கடவுள்


காதல்

புவியின் இரு திக்குகளில்
இணை கோடுகளாய்
அவரவர் வாழ்வில் விரைகிறோம்.

விழைகிறோம்
இணை கோடுகள் கூடும் என்று ..

பிரிந்த பின்
இணை கோடுகள் கூடுவது
தொடுவானில் மட்டுமே.
தொடுவானமோ வெகு தூரம்.

தொட்டு விடும் தூரத்தில் நின்று
என் வலைத் தோட்டத்தில்
கண் படாது உலவுகிறாய்.

உணர்வுகள்
உறவுகள்
புரிதல்கள்
கண்ணீர், கவலை
இன்பம்
குழந்தை என
என்னில் அடங்கா
எண்ணக் குவியல்களின்
நட்ட நடுவே
அன்பென்று
துடித்துக் கொண்டிருப்பது
மட்டும்
நீ விட்டுச் சென்ற இதயம்.

கடவுள்

புவியின் இரு திக்குகளில்
இணை கோடுகளாய்
அவரவர் வாழ்வில் விரைகிறோம்.

விழைகிறோம்
இணை கோடுகள் கூடும் என்று ..

பிரிந்த பின்
இணை கோடுகள் கூடுவது
தொடுவானில் மட்டுமே.
தொடுவானமோ வெகு தூரம்.

தொட்டு விடும் தூரத்தில் நின்று
என் மனத்  தோட்டத்தில்
கண் படாது உலவுகிறாய்.

உணர்வுகள்
உறவுகள்
புரிதல்கள்
கண்ணீர், கவலை
இன்பம்
குழந்தை என
என்னில் அடங்கா
எண்ணக் குவியல்களின்
நட்ட நடுவே
அன்பெ சிவமென்று
துடித்துக் கொண்டிருக்க,
நீர் விட்டுச் சென்ற இதயம்.