Wednesday, August 13, 2014

பாரத கனா

பாரத கனா

வளைகோல் வலுவிழந்து
ஒரு குளிர்கால  இரவின்
உஷ்ணத்திற்கு உணவானது.

புயலென ஓடிய காலணிகள்
தேய்ந்து தூக்கி
எறிந்தாயிற்று!

ஆட்டத்தில்
 குடம் குடமாய்
வியர்வை உறிஞ்சிய
ஆடைகள் இற்றுப் போயின!

தேசிய விளையாட்டில்
சாதனைகள் பல படைத்த
தாத்தா தூசுப்
போர்வையின் பின்
கிரிக்கட்டு  விளையாடும்
குழந்தைகளை
இமைக்காது பார்க்கிறார்

மெதுவே
காற்றில் ஆடி ஆடி
மிதந்து வந்து
தாத்தா மேல் அமர்கிறது
ஒரு பழுத்த  ஆலிலை.