Friday, June 01, 2012

பழக்கம் 

மறப்பேன் என சூளுரைத்து
கால் சுற்றிய பாம்பை
கட்டவிழ்க்க
தவித்துப் புலம்பி
நித்தம் நிதம்
போராடிப் போராடி

திடும் என  ஒரு நாள்
எந்த முயற்சியும் இல்லாதது போல்
முடிச்சு அவிழ்ந்தது.
பாம்பும் நகர்ந்தது.

பல நாள் நிம்மதியின்பின்
அயர்ந்து உறங்கும்
ஓர் இரவின் அதிகாலைக் கனவில்
கிளர்ந்தெழுந்து
பழக்க உருவில் படம் எடுத்தது
ஞாபக நாகம்.

சிவ சிவா  என
பரம சிவனைப் பார்த்தால்
பரம சிவன் கழுத்திலும் நாகம்!

Background:

Snakes are used as a metaphor for recurring thought patterns.







No comments:

Post a Comment