Showing posts with label mannan. Show all posts
Showing posts with label mannan. Show all posts

Saturday, April 03, 2010

அண்ணன் மன்னன்
கரு வண்ணன்
கவிக்கொரு கண்ணன்
வாரத்தில் பத்து நிமிடம்
வாழ்வின் அனுபவம்
வார்த்தையில் வடித்தெடுத்து
கவிதை சொல்வான்
இதயம் வெல்வான்

மீதி நேரம்
கணினி திரையில்
முகம் புதைத்து
டைடலில்
தேடல் தொலைத்தவன்

அண்ணன் மன்னன்
கரு வண்ணன்
கவிக்கொரு கண்ணன்

Saturday, March 27, 2010

வயிற்றுக்கு மேல் இதயம்

இதயம் எட்டாத தொலைவில்
சிந்தனைகளின் பெட்டகம்.
சதா சிந்தனை புழுதி
செந்நிறமாக..
சுள்ளென்று ..
இதயத்தின் ஈரம்
அறவே இல்லாது..

ஆசனவாயின் மேல் பற்கள்
நர நரக்கின்றன ..
சதா சர்வகாலமும்
மூடாத வாய்கள் இருபுறமும் ..
மூத்திர வாடையுடன்
வார்த்தைகள் உதடுகளில் ..

தெறித்து விழும்
சிந்தனை சகதி
தாண்டி சென்று
படைத்தவனை கேட்கிறேன்.
படைப்பில் கோளாறா?

வயிற்றுக்கு மேல் இதயம் தந்தேன்
வயிற்றின் பசி
இதயத்தை தின்னாதிருக்க..

நீரென்ன செய்தீர்?
இதயம் சிந்தனைக்கும்
வயிற்றுக்கும்
இடையே ஏனென்று
எதிலும் சேர்க்காது
ஒளித்து வைத்தீர்.

சிந்தனை விரிந்து , பரவி
சுழன்று அடிக்க
வயிற்றில் அக்னி பெருகி
அகோர பசியுடன்
பேயாய் மாறித் தவிக்கிறீர்.

நும் இதயம் மட்டும்
தேடி எடுத்தாரும்.
மனிதம் மீட்டு தருவேன் என்றார்.