அண்ணன் மன்னன்
கரு வண்ணன்
கவிக்கொரு கண்ணன்
வாரத்தில் பத்து நிமிடம்
வாழ்வின் அனுபவம்
வார்த்தையில் வடித்தெடுத்து
கவிதை சொல்வான்
இதயம் வெல்வான்
மீதி நேரம்
கணினி திரையில்
முகம் புதைத்து
டைடலில்
தேடல் தொலைத்தவன்
அண்ணன் மன்னன்
கரு வண்ணன்
கவிக்கொரு கண்ணன்
Showing posts with label mannan. Show all posts
Showing posts with label mannan. Show all posts
Saturday, April 03, 2010
Saturday, March 27, 2010
வயிற்றுக்கு மேல் இதயம்
இதயம் எட்டாத தொலைவில்
சிந்தனைகளின் பெட்டகம்.
சதா சிந்தனை புழுதி
செந்நிறமாக..
சுள்ளென்று ..
இதயத்தின் ஈரம்
அறவே இல்லாது..
ஆசனவாயின் மேல் பற்கள்
நர நரக்கின்றன ..
சதா சர்வகாலமும்
மூடாத வாய்கள் இருபுறமும் ..
மூத்திர வாடையுடன்
வார்த்தைகள் உதடுகளில் ..
தெறித்து விழும்
சிந்தனை சகதி
தாண்டி சென்று
படைத்தவனை கேட்கிறேன்.
படைப்பில் கோளாறா?
வயிற்றுக்கு மேல் இதயம் தந்தேன்
வயிற்றின் பசி
இதயத்தை தின்னாதிருக்க..
நீரென்ன செய்தீர்?
இதயம் சிந்தனைக்கும்
வயிற்றுக்கும்
இடையே ஏனென்று
எதிலும் சேர்க்காது
ஒளித்து வைத்தீர்.
சிந்தனை விரிந்து , பரவி
சுழன்று அடிக்க
வயிற்றில் அக்னி பெருகி
அகோர பசியுடன்
பேயாய் மாறித் தவிக்கிறீர்.
நும் இதயம் மட்டும்
தேடி எடுத்தாரும்.
மனிதம் மீட்டு தருவேன் என்றார்.
இதயம் எட்டாத தொலைவில்
சிந்தனைகளின் பெட்டகம்.
சதா சிந்தனை புழுதி
செந்நிறமாக..
சுள்ளென்று ..
இதயத்தின் ஈரம்
அறவே இல்லாது..
ஆசனவாயின் மேல் பற்கள்
நர நரக்கின்றன ..
சதா சர்வகாலமும்
மூடாத வாய்கள் இருபுறமும் ..
மூத்திர வாடையுடன்
வார்த்தைகள் உதடுகளில் ..
தெறித்து விழும்
சிந்தனை சகதி
தாண்டி சென்று
படைத்தவனை கேட்கிறேன்.
படைப்பில் கோளாறா?
வயிற்றுக்கு மேல் இதயம் தந்தேன்
வயிற்றின் பசி
இதயத்தை தின்னாதிருக்க..
நீரென்ன செய்தீர்?
இதயம் சிந்தனைக்கும்
வயிற்றுக்கும்
இடையே ஏனென்று
எதிலும் சேர்க்காது
ஒளித்து வைத்தீர்.
சிந்தனை விரிந்து , பரவி
சுழன்று அடிக்க
வயிற்றில் அக்னி பெருகி
அகோர பசியுடன்
பேயாய் மாறித் தவிக்கிறீர்.
நும் இதயம் மட்டும்
தேடி எடுத்தாரும்.
மனிதம் மீட்டு தருவேன் என்றார்.
Subscribe to:
Posts (Atom)