Saturday, April 03, 2010

அண்ணன் மன்னன்
கரு வண்ணன்
கவிக்கொரு கண்ணன்
வாரத்தில் பத்து நிமிடம்
வாழ்வின் அனுபவம்
வார்த்தையில் வடித்தெடுத்து
கவிதை சொல்வான்
இதயம் வெல்வான்

மீதி நேரம்
கணினி திரையில்
முகம் புதைத்து
டைடலில்
தேடல் தொலைத்தவன்

அண்ணன் மன்னன்
கரு வண்ணன்
கவிக்கொரு கண்ணன்

No comments:

Post a Comment