Sunday, July 05, 2015

ஆரண்ய கண்டம்

சதா சலசல
இரைச்சலால்
நிறைந்த கானகத்தில்
இருள் சூழும்
ஒரு மாலைப்பொழுதில்
மின்னல் என
தோன்றி
மறைந்தது
ஒரு சொர்ணமான் .

ஆசையில்
அலைக்கழியும்
ஜானகியும்,
மானின் பின்
ஓடத் தயாராய்
ராமனும்
 லட்சுமணன் இல்லாத
வனத்தில்
ராவணரும்
காத்திருக்கிறார்.

No comments:

Post a Comment