Monday, June 21, 2010

Dementia! (English)

The wrinkles in my face
The Life I traversed in space

Life is beautiful and sunny
Mostly though..
But for few,to remind of -
Life is beautiful and sunny.

A long journey too far
not many have stayed on par

On my own leading my life
Loneliness - its a daily strife

May be today or tomorrow?
Padded up in the pavilion
and ready to go oblivion.

Ah! my memories are fading
Forgetfulness is endearing.
Oh God! save my head
Losing it I dread

Only my memories, I want to hold tight
it goes away fading, outright.

Memories die away like an ember
What I lost, I don't even remember.

Dementia, its a shadow in twilight
ever growing on me, on my memories.

Some day, I'll forget to remember
"who am i" and my meaning
Remember to forget -
From day one of living, one starts out dying.

I struggle, I fight back
my mind from losing
how long? the count I lost tracking.

Someday, I may not remember when
Dementia silently wins and proclaims
"Its all me and there is no you."

I live, I exist,
without knowing
I live, I exist
Until I forgot to breathe
One last time.

Sunday, June 20, 2010

Dementia!

கை விரல்களின் சுருக்கம்
கடந்து சென்ற
வாழ்வின் வரைபடம்.

பெரும்பாலும் சந்தோஷம்
மற்றவை
வாழ்க்கை பெரும்பாலும்
சந்தோஷமாய் கழிந்ததை நினைவுறுத்த...

நெடிய வாழ்வின் எச்சமாக
துணை வரும் தனிமை.
சொல்லிப்புரிய வைக்க
இயலாத தனிமை.
எல்லாரும் இருந்தும்
என்னுடன் என் நிழலாக ..

நாட்கள் மட்டும்
கடந்து போகும்
இதோ இதோ இன்றோ நாளையோ ...
உதறித் தள்ள வலியும் இல்லை.
பற்றி பிடித்திட பிடிப்பும் இல்லை.

விரட்டி வரும் மறதி
நினைவுகள் விழுங்காதிருக்க விழைவு.
இந்நாளின்
என் ஒரே பிரார்த்தனை.

என் நினைவுகள் மட்டுமே
என் ஒரே சொத்து.
ஆயினும் மறதி
நினைவுகள் தின்று தீர்கிறது.
பசித்து வீடு வந்த பிள்ளை போல
இன்னும் கொடு இன்னும் கொடு என்று.

தினம் நினைவுகள் மெல்ல
மறக்கின்றன..
நான் யார் என
அவ்வப்போது
நானே மறந்து போகிறேன்.

மரித்தல்
நினைவிலிருந்து ஆரம்பிக்கிறது.
ஆயினும்
போராடிப் போராடி மீட்டு வருவேன்
என் அடையாளம்.

இப்படியே
என் அடையாளம்
மீட்டு வரும் முயற்சியும்
ஒரு நாள் மறந்து போவேன்.
மறதி முழுதாய்
என்னைத் தின்று தீர்க்கும்.

அடையாளம் மறந்த
உயிருள்ள ஒரு மூட்டையாய்.
பிறந்த அன்று போல
மறந்த அன்றும்.

Tuesday, June 15, 2010

குரங்கு கை சிரங்கு

கருத்த பழம் .. (literal translation of Black Berry in Tamil)..

That is the title i thought of keeping for this.Then i realised there is a big business for QWERTY business phones out here. From Nokia (thatz ma fav) to Black Cherry - there will be lot of others, who will protest through tweets to twangs. So, changing the title to குரங்கு கை சிரங்கு.. excusez-moi. This post is about the travails of a guy who upgraded to a business phone recently... And this blog gonna be a multilingual one like Kites - the Box Office Bomb. Who expects a blog to be blockbuster? chalega re! Am doing justice by giving an English version of this post. very soon

It was more of a work based necessity that I needed to upgrade myself from a simple hai-hullo-bolnewala phone to a business phone. Am sharing my experience and observations, in the process of buying one.

குரங்கு கை சிரங்கு

ஹய் டெக் நண்பர்களுக்கு சிலருக்கு ஒரு வினோத வியாதி. ரெண்டு மாதத்திற்கு ஒரு தடவை, மார்கெட்டில் என்ன மொபைல் புதிதாய் வந்திருக்கிறதோ, அதை உடனடியாக வாங்க வேண்டிய கட்டாயம். அரிப்பு.
இணையத்தில் மொபைல் மார்க்கெட் வரும் முன்னரே, அதை பற்றிய ஆதி முதல் அந்தம் வரை தெரிந்து, அது குறித்து வலைப்பதிவுகளை அலசி, பிரித்து மேய்ந்து, ஒரு நடமாடும் களஞ்சியமாகவே இருப்பர்.
இதை மாதிரியான ரெண்டு ஜீவன்கள், நேரில் சந்தித்தால் இலக்கியத்தில் ரெண்டு புலவர்கள் நேரில் சந்தித்த அனுபவம் பற்றிய பாடல் போல இருக்கும். இலக்கியம் பற்றிய பற்றில்லாதவர்களுக்காக இது: இருவரும் புளகாகிதம் உற்று, பேருவகை அடைந்து, ஒரு வித பரவச நிலையில் இருப்பர் - இருவரில் யாராவது ஒருவருக்கு அலைபேசி அழைப்பு வந்து கலைக்கும் வரை.

இந்த மாதிரி ஆசாமிகளுக்காகவே, எக்ஸ்சேஞ் ஆபர் கொடுத்து (கெடுக்கும்) வைக்கும் அலைபேசி கடைகள் ஏராளம்.

கடையில் கேட்பாரோ? புதுசா கருத்த பழம் - சுட்ட பழம் வேணுமா, சுடாத பழம் வேணுமா?

காட்சி 1: பின்னிரவு காட்சி முடிந்து வரும் போது, சாலையின் சிக்னலில், நெடு நாள் கழித்து நண்பன் ஒருவனைக் கண்டேன். தலை கவிழ்த்து, உள்ளங்கையில் உற்று நோக்கியவாறு, அதி தீவிர சிந்தனையில்... சூழ்நிலையின் பிரக்ஞை அற்று இருந்தான். என்ன ஆயிற்று நண்பனுக்கு? விசாரித்ததில், கருத்த பழத்தில் அலுவலக மெயில் பார்த்திட்டு இருந்தானாம். நள்ளிரவில்! அலுவலகம் இருபத்தி நாலு மணிநேரமும் துரத்துகிறது.

காட்சி 2 : pizza hut . ஞாயிறு மதியம் ஒரு மணி. கணவன் மனைவி. இருவரும் எதிர் எதிரே. மேல் தட்டு உழைப்பாளிகள். ஏறக்குறைய அரை மணி நேரம் இருந்தனர். பேசிய வார்த்தைகள் இரண்டு வரிகளில் அடங்கி விடும்.
something like, "இதை ஆர்டர் பண்ணட்டுமா?" "சரி பண்ணிடுங்க". மீதி நேரம், தலை கவிழ்த்து இருவரும் தங்கள் கருத்த பழத்தின் டிராக் பந்தை உருட்டிக்கொண்டு. அஞ்சல் அனுப்பிக் கொண்டு.

காட்சி 3 : பெரும்பான்மை அலுவலகத்தில் இந்த காட்சியைக் காணலாம். meeting request வந்திருக்கும். துறைத் தலைவருடன் ஒரு ஐந்து நிமிட சிறு நேர்காணல். நேரில் போனால், james bond பட வில்லன் போல முதுகு காட்டி உட்கார்ந்திருப்பார். இல்லை, மடி கணினியில் தலை புதைத்து அமர்ந்திருப்பார். கேள்விகள் மட்டும் டாண் டாண் என்று வரும். பதிலளித்துக்கொண்டிருக்கும் போதே, கருத்த பழம் உருட்டி கொண்டிருப்பார். ஒரு சிறு சாரி சொல்லி அலை பேசியையும் பதில் அளிப்பார். parallel processing at its extreme ! வடிவேலு மாதிரி "என்னை வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே" என்று சொல்லத் தோன்றும்.

கருத்த பழம் தயாரிப்பாளருக்கு சில யோசனைகள்:

* டிராக் பந்தில் ஒரு உருத்திராட்சக் கொட்டையை வைக்கவும். கரும யோகத்தில், கண்ணாயிருக்கும் போது கொஞ்சம் புண்ணியமும் சேர்த்துக்கொள்கிறோம்.
* குட்டித் திரையில் கண்கள் இடுக்கி கொண்டு, அஞ்சல் பார்த்து பார்த்து, தூரப்பார்வை விரைவில் வந்து சேரப்போகிறது. அப்போது, கண் கண்ணாடிக்கான விசேஷ சலுகை தரலாம்.
* கண் கண்ணாடி உள்ளேயே அஞ்சல் படிக்கும் வசதி செய்து தரலாம். போர் விமானிகள் HUD ( head up display ) உபயோகிப்பது போலவே, அஞ்சல் படித்துக் கொள்கிறோம். குறைந்தது கழுத்து வலியாவது மிஞ்சும். டிஸ்ப்ளே டெக்னாலஜி முன்னேறி வரும் வேகத்தில், இது விரைவில் சாத்தியமே என்று தோன்றுகிறது.

இவ்வளவு காட்சியையும் சொல்லி விட்டு நானும் same side goal போட்டு விட்டேன்.

மனைவியிடமிருந்து "காலங்கார்த்தாலே பல்லு கூட தேய்க்காம, என்னத்த போன்ல பார்த்திட்டு இருக்கீங்களோ. புது போனே வந்தாலும் வந்துது, என்ன ஏதுன்னு ஏறெடுத்து கூட பேச மாட்டேங்கிறீங்க..." என்று பாட்டு வாங்கும் போதுதான் தெரிந்தது, எனக்கும் குரங்கு கை சிரங்கு வியாதி வந்ததென்று.

Saturday, May 15, 2010

Vishwaroopa - revealed

While meditating in Nanganallur Anjaneya Temple, (February last week, 2010), a revelation of why God is represented as huge statues happened.

Be it the Jesus statue in Rio, Murugan in Batu Caves, Mahavir in Shravanabelagula, Shiva in Murdeshwar, Ranganatha of Srirangam - men who created the physical representation of God always created big.

The realization of Self, the realization that Self is a drop in the ocean of Godness, which is present everywhere, all around brings submission and humility - instantly.

The realization blows away the mind, the intellect, all the identity that has been conditioned for years together - like a Tsunami.

I lose myself to become Him. Even this statement is not right. We become One. Ultimate merger. There is no difference, between us. Aham Brahmasmi.

With such Godness, when I look around, I am connected with everything. Everyone. Harmonized.
I see Godness everywhere. The darshan happens within. The realization is within.Full (everything is Me) and empty (I am nothing) at the same time. The Godness qualities of an indescribable depth of love, compassion, gratefulness, devotion, peace and wonder. A serene thoughtless, timeless state of existence.


This is Viswaroopa darshan. Expanding from a limited form, realize and merge into the Unlimited Formless.

Not that there is someone with 4 heads, and ten hands appearing before and asking "I appreciate your bakthi. what do you want?" It happens only in visual SFX. :)


How do the realized ones, convey this to others? To show the path for others, to remind of the greatness of God, who is everywhere - biggest of the big, widest of the width and deepest of the depth.

Create the replica of God - as big as possible. Through worshiping the statue, we are addressing the Indescribable One.

Zero - revealed

While driving down Western Express Highway, (jan-1-2010), another sutra was revealed.

It just flashed, out of nowhere and the thought certainly grabs the attention. It is vivid and not yet another random thought. The source of thought. I dont know.

"Zero should be worshipped. It is beyond a number. The shape does not have a start, and it does not have an end. It is the symbolism of motherhood - from where everything comes from and goes back too. Zero symbolizes the Absolute and the Nothing at the same time.

Even mathematically, any no. trying to divide (or even multiply) zero gets zero as an answer, symbolizing its infinite nature. Infinity divided or multiplied by anything is still infinite.

Also, any number getting divided or multiplied by zero, leads to infinity, symbolizing the nothingness in it. Finite merging into infinite. Zero transforms the finite completely."

Meditation - I

22-November-2009:

During a visit to Siddhi Vinayak, a sutra was revealed to me,in a flash

Surrender unconditionally and completely to the Supreme

There is no past
There is no future
What do you have? NOW!
What have you got? EVERYTHING!

-- Revealed 22-nov-09 At siddhi vinayak

Thursday, April 15, 2010

Sex, sanyasi, sensations

The world is funny! Few weeks back there was this Sun TV that was tantalizing TN with repeat, re-re-repeat of the 'sharing' and 'bonding' of Ranjita & Nityanandha nee Rajasekhar. That was quite a hot video - And poor FTV got banned for a while, for being obscene. Can the ministry of I&B shun Sun TV?

There was furor. Destruction of the ashram; and feelings ranging from Innocent question of "Was that REALLY nityananda swamiji?" to outright jealous "I do not get to enjoy and this guy is sc**wing around?"

The crux was "how can a sanyasi enjoy sex?'

Now, the public has conveniently forgotten the whole episode, excepting Dinakaran and Nakkheeran who are still carrying this in the home page of their websites. Nakkheeran was even peddling the ‘full’ video for anyone ,whoever subscribed to their website for a year.

Nityananda has come out with another video, this time a tightly framed footage (I guess Osama popularized the culture of fugitive-celebrity video blogging) that he is getting into deeper penance, away from the Ashram (and actresses) – spiritual seclusion, in his own words.


Right said Buddha, "Desire is the root cause of all evil."

All the best Nitya!


Here is my take on the situation:

Whatever Nitya said/preached holds well whether he screws someone or not. The so called devotees – Better start to look up.

Whatever events happened is a test - for both the Guru and the Shishya.

An integrity test for the Guru - to understand his weakness and a test of faith for the disciple.

Whoever is a sincere seeker is not swayed by the incident. They steadfast continue their path. They have the clarity – the guru is a sign post and sign posts need not have to travel with them.

The celebrity status of the Guru and the cult-like followers are gone.
What else can be a better time, than now, to look at what Nitya has shared as wisdom?

"Let he who is without sin cast the first stone." – Jesus of Nazareth

Whoever got disturbed has to understand that they have brought in their judgment and their own petty mind into the Guru-Shishya relationship.

Whoever burnt, stomped, attacked the ashram and the followers, are the Hindu equivalent of the Jihadis. They are the emotional idiots, who have not realized their own mind's making.

Nitya, as guru of the ashram, did the right thing - gave up the control of the ashram, whose wealth status had attracted the ire.

I am sure, Nitya will re-surface and will come back strongly than before.

I will not be surprised, the whole fiasco disappearing from the media (and hence public memory) completely, as soon as the political objectives behind the sting operation were achieved.

How soon? Depends on the political climate and the public mood. Anyway, the public memory is short lived and opinions are relative. Just one more scandal in the region, Nitya episode will be - End of "nityananda" - Season I

Saturday, April 10, 2010

Wings cant fly

my lil teen daughter
bubbly and a non-stop chatter

an angel - she is a darling
now cuddled up and cryin

Keeps me away and shy
Why Whisper Wings cant fly?

travel

நெடுந்தூர பிரயாணம்
அதிகாலை விமானம்
கிளம்பும் போது
மனைவி கேட்டாள்
எல்லாத்தையும்
எடுத்துக்கிட்டீங்களா ?
purse  ல cash?
ticket?
tie?
blackberry?
laptop charger?
முத்தம் ஒன்னு
விட்டுடீங்களே?
எடுத்திட்டு போகலையா?
பிரயாணம் இனிதாய்
ஆரம்பம் :)

Accident

ரசிக்காத ஓவியங்கள்

வாழ்க்கைத் துடிப்பின்
இறுதி போராட்டம்
ஓவியமாய்
மாநகர சாலையில்
காவல்துறை
கைவண்ணத்தில் !

ரத்தம் ஒரே நிறம்

மனிதரில் ஆயிரம் ஜாதி
சாலை விபத்தின்
ரத்த சுவடுகள்
சொல்லும்
மரண ஜாதி
ஒரே ஜாதி

Saturday, April 03, 2010

e=mc^2

சூடு இருந்தா
தேடுறது 
செம கட்டை.

சூடு குறைஞ்சு
செத்தா
ஏத்துறது கட்டை.

சூடு போனா கட்டை
கட்டை எரிஞ்சா சூடு.

சூடு energy
கட்டை matter

e = mc^2
தொடர்பு புரியுதா 
மாமே?

அண்ணன் மன்னன்
கரு வண்ணன்
கவிக்கொரு கண்ணன்
வாரத்தில் பத்து நிமிடம்
வாழ்வின் அனுபவம்
வார்த்தையில் வடித்தெடுத்து
கவிதை சொல்வான்
இதயம் வெல்வான்

மீதி நேரம்
கணினி திரையில்
முகம் புதைத்து
டைடலில்
தேடல் தொலைத்தவன்

அண்ணன் மன்னன்
கரு வண்ணன்
கவிக்கொரு கண்ணன்

Sunday, March 28, 2010

நினைவுகளாய் காலம்..

நினைவுகளாய் காலம்..
வலியில் விழிக்கிறேன்
கண்ணீர் கழுவிச் செல்கிறது
கலந்த காலம்
கடந்த காலம்.

கனவு பட்டங்களில் பறக்கிறேன் -
நூலேணி நினைவுகள் நீளத்திற்கு.
கண்கள் பழகாத உயரத்திற்கு

விரையும் மேகங்கள்
சொல்லிச் செல்லும்
வருவது சுழல்காற்றுடன்
அடைமழை.

நூலேணி நினைவுகள்
நீள நீள
கனவு பட்டம்
தொட விழையும்
கருவானில்
ஒரு வானவில்.
-- விஷ்வேஷ்வரன்

நினைவெல்லாம் நித்யா

நினைவெல்லாம் நித்யா

கதவை திற
காற்று வரட்டும்.

திறந்த கதவில்
நுழைந்தது
நாடோடித் தென்றல்.

மறந்தது நிதானம்
ஜன்னல் வழியே
பறந்தது ஆனந்தம்.

first poetry written along with significant contribution from my wife bhuvana

Saturday, March 27, 2010

வயிற்றுக்கு மேல் இதயம்

இதயம் எட்டாத தொலைவில்
சிந்தனைகளின் பெட்டகம்.
சதா சிந்தனை புழுதி
செந்நிறமாக..
சுள்ளென்று ..
இதயத்தின் ஈரம்
அறவே இல்லாது..

ஆசனவாயின் மேல் பற்கள்
நர நரக்கின்றன ..
சதா சர்வகாலமும்
மூடாத வாய்கள் இருபுறமும் ..
மூத்திர வாடையுடன்
வார்த்தைகள் உதடுகளில் ..

தெறித்து விழும்
சிந்தனை சகதி
தாண்டி சென்று
படைத்தவனை கேட்கிறேன்.
படைப்பில் கோளாறா?

வயிற்றுக்கு மேல் இதயம் தந்தேன்
வயிற்றின் பசி
இதயத்தை தின்னாதிருக்க..

நீரென்ன செய்தீர்?
இதயம் சிந்தனைக்கும்
வயிற்றுக்கும்
இடையே ஏனென்று
எதிலும் சேர்க்காது
ஒளித்து வைத்தீர்.

சிந்தனை விரிந்து , பரவி
சுழன்று அடிக்க
வயிற்றில் அக்னி பெருகி
அகோர பசியுடன்
பேயாய் மாறித் தவிக்கிறீர்.

நும் இதயம் மட்டும்
தேடி எடுத்தாரும்.
மனிதம் மீட்டு தருவேன் என்றார்.

Tuesday, March 23, 2010

The i-generation

செல்போனில்
நண்பனின் அப்பா.
கிராமத்து விவசாயி!
நேராக விஷயத்திற்கு வந்தார்.

"முடிஞ்சா நேர்ல ஒரு நடை வரச்சொல்லேன்.
இழுத்தார்.
"அம்மாவுக்கு மருந்துக்கு ரொம்ப செலவாயிருச்சு.
அறுவடைக்கு கையில காசு பத்தல."

இரவில் நண்பன் வந்ததும் சொன்னேன்.

farmville இல் மும்முரமாய்
விளைச்சல் அறுவடை
செய்தவாறே சொன்னான்.
"இப்போ பிஸியா இருக்கேன்
அப்புறமா வரேன்னு சொல்லிடு"

Sunday, February 21, 2010

கூத்தாடி (நெடுங்கதை)

திருசூலம் ரயில் நிலையத்தில் அவளைப் பார்த்தேன். 4-5 சிறார்களுடன் பிளாட்போர்மில் அமர்ந்திருந்தாள்.  டோலக்கு, ஜல் ஜல் என தொழிலுக்கு உண்டானஉபகரணங்களுடன்.


கட். அதற்கு முன் ஒரு சிறு அறிமுகம். நான் மும்பையில் ஒரு குறும் பட இயக்குனர்.சற்று முன் வேலை விஷயமாக சென்னை வந்து சேர்ந்தேன்.

மும்பையில் தேடியும் அகப்படாத ஒரு முகம். பெரிய தேன் நிறக் கண்கள், ஒரு காந்த கவர்ச்சியுடன். மாசு மருவில்லாத வழவழா சருமம். சாம்பு போட்டு அலசி ஒரு பியூடிசியன் கையில் கொடுத்தால்.. இன் புது வரவு ரெடி!காதில் ஒரு ஈர்க்குச்சி மட்டும். கழுத்தில் ஒரு மெல்லிய பிளாஸ்டிக் மாலை. அழுக்கடைந்த, ரெண்டே ரெண்டு ஊக்குகளில் மானம் மறைக்கும் பிளவுசுக்கு, நேர்மாறாக பளிச்சென்ற புது நிறம், வெயிலில் வாடாத வனப்பு!

ரொம்ப வெறிக்கிறேனோ? சுற்றிலும் பார்வை படரவிட்டேன். ஓரக்கண்களாலும், ரொம்ப நேராகவும் - ஆடவர் கூட்டம் தின்று கொண்டிருந்தனர் - ஆவென..

4 - 5 குழந்தைகள் . சில அவள் ஜாடையில். கூட்டம், வெய்யில், பிரயாணிகள், வந்து செல்லும் ரயில்கள். எதுவும் உறைக்காமல் அவளது வெறித்த பார்வை .. nikon d70 க்கான நிழற்பட தருணங்கள்.

ஏலே .. லாப்டாப்பும் கையுமா வெள்ளையும் சொள்ளையுமா இப்படி சைட் அடிக்கிறியேடா? " மனசாட்சி இடித்து உரைத்தது..

ரயில் வந்து சேர, கிடைத்த கேப்பில் அருகிலுள்ள பெட்டியில் தொற்றிக்கொண்டேன். மாம்பலம் எத்தனாவது ஸ்டேசன்? ரயில் ஒரு உதறு உதறிக் கிளம்பியது.

கொய்யா, ஊக்கு, குழந்தை படக்கதை, ரயில் அட்டவணை.. என ரயில் ஒரு நடமாடும் சந்தை கடை ஆனது..அட! கூத்தாடியும் அதே கோச்சில் ஏறி இருந்தாள்.. எப்படி தான் கூட்டத்தில் 4-5 குழந்தைகளுன் ஏறினாள்?

பெரிய பையன் டோலக்கு அடிக்க, 2 சின்ன பெண் குழந்தைகள் பல்டி அடித்தன. ஒரு சிறு வளையத்தில் உடம்பை நுழைத்து வெளியே வந்தன.. நின்ற வாக்கில் ஒரு குட்டி கரணம் அடித்தால் ஒருத்தி.

கூத்தாடி சீனியர் மட்டும் நகரவில்லை.. நடை மேடை வராத கதவு பக்கம் ஒதுங்கி குந்தி இருந்தாள்..நின்று கொண்டிருந்த இளைஞர் கூட்டத்திற்கு வசதியாய் இப்போது பறவை பார்வையில் காணக் காட்சி! கண்கள் காந்தம் வைத்தாற்போல் ஒட்டி இருந்தன.இரட்டை அர்த்த கமெண்டும், சிரிப்பும், கிண்டலுமாய்..

இன்னொரு சின்ன குட்டி, சதா மூக்கு ஒழுகிக் கொண்டு, கையில் ஒரு ஸ்டீல் பாத்திரம் ஏந்தியபடி சுற்றி வந்தது. சில பிரயாணிகள் சில்லறை இட்டனர். என் பையனுக்கும் மூக்கு ரொம்ப ஒழுகுவதாக என் மனைவி குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாள்.

சே! இந்த குட்டியும் என் பையன் வயசு தான் இருக்கும்ல? அவளுக்கு மிஞ்சி போனா 22-23 வயசு தான் இருக்கும். இப்போவே ஒரு 3-4 டெலிவரி பார்த்திருப்பா? நிதம் நிதம் ரயிலில் வரும் மக்களை நம்பி பிழைப்பை ஓட்டி கொண்டு.. குழந்தைக்கு நோய் நொடின்னா எங்கே போய் மருத்துவம் பார்ப்பா? வேலையை விட்டிட்டு போவாளா? இவளுக்கு யாரு பாதுகாப்பு? இப்போவே இவ்வளவு வெறிக்கிறோம்? ராத்திரியில் எப்படி நிம்மதியா விடுவாங்க? மாபியாவா? அல்லது புலம் பெயர்ந்த அவலமா?

பசியும், ஏழ்மையும், சார்ந்து இருக்கும் சமூகமே பாதுகாபில்லாமல் இருக்கும் நிலையும், வாழ்வின் நிலையற்ற தன்மையும் முகத்தில் அறைந்தன. அடியற்ற பாதாளத்தில் வீழ்வது போல ஒரு மனநிலைக்கு தள்ளியது.

சின்ன குட்டி என்னிடம் வந்து கை ஏந்தியது..ரோஸ் நிற பிஞ்சு விரல்கள். நகங்களில் அழுக்கு அடை போல ஓட்டி இருந்தது.

தினம் தினம் இப்படியே.. அம்மைவைப் போல. 13-14 வயசிலேயே, குழந்தைத்தனம் துறந்து. ரயிலும் ரயில் சார்ந்த இடமும்..என்ன தினையோ? என்ன வாழ்வோ? அரசாங்கத்தின் கண்களுக்கும், கணக்கெடுப்புகளுக்கும் வராமல்.. பெயரில்லாத சமூகத்தை சார்ந்து.. "அரசை விடு. சமூகத்தில நீயும் தான் ஒருத்தன். நீ என்ன பண்ண போறே? நீ போடுற ஒரு ரூவா காசுல இவ life மாற போவுதா? அந்த ஒரு ரூவா இந்த குழந்தைக்கு எந்த விதத்தில் போய் சேருகிறது? இவ அம்மா இவளை வைத்து சுரண்ட இல்ல செய்கிறாள்? விதௌட்ல வரவள ரயில் போலீசு சும்மா எப்படி விடும்? அவ கிட்டயும் இல்லே காசு புடுங்குவாங்க? இங்க யாரு யாரு கிட்டே புடுங்கறாங்க? மனசு சூறாவளிஆனது.

"காசு குடு அண்ணா"

ஒரு பெரிய கூட்டம் வாசல் நோக்கி நகர ஆரம்பித்தது. மாம்பலம்; வரப் போவுதா?

காசு குடு அண்ணா. பிஞ்சு முழங்கை சுரண்டியது. அது வரை சுழற்றி அடித்த உணர்ச்சிகள் இன்னும் அதிகம் ஆயின - இயலாமை, கோபம், கழிவிரக்கம், துக்கம்..

தப்பி ஓடு தப்பி ஓடு. ஊளை இட்டது மனம்.

எங்கே போக? எங்கே போவே? அதே மனதின் வேறு ஒரு குரல்.

மாம்பலம் ரயிலடியின் மஞ்சள் போர்டு தெரிந்தது.

சரேலென திரும்பினேன்.

கூட்டத்துடன் ரயில் விட்டு இறங்கியதும் மனசு லேசானது. காற்றாய் இருந்தது.

என்னை சுற்றி உள்ளவர்கள் ஆவென பார்ப்பது முதுகின் பக்கம் உணர்ந்தேன்..

இறங்கும் முன் சின்ன குட்டியின் பாத்திரத்தில் போட்டது முழுசாய் ஒரு 500!

Thursday, February 18, 2010

Drip..Drip..

While returning back from Belgaum to Bangalore, after successfully conducting the ICICI Bank Golf Masters Tournament 2007- the thought flashed through the mind

"What do you expect, when you do not know what to expect?"

since then, i am trying to get an answer to this question. somehow, it has been going in circles. It has been a big thought-black hole (nothing comes out).. Something similar to the looped railway station in Matrix III movie ..

Please share your views if you are able to decrypt.

Wednesday, February 17, 2010

விவசாயி. நான் விவசாயி....... (குட்டி கதை )

செல்போனில் நண்பனின் அப்பா.கிராமத்து விவசாயி! நேராக விஷயத்திற்கு வந்தார்.
முடிஞ்சா நேர்ல ஒரு நடை வரச்சொல்லேன்" இழுத்தார்.

அம்மாவுக்கு மருந்துக்கு ரொம்ப செலவாயிருச்சு. அறுவடைக்கு கையில காசு பத்தல." இரவில் நண்பன் வந்ததும் சொன்னேன்.
farmville இல் மும்முரமாய் விளைச்சல் அறுவடைசெய்தவாறே சொன்னான்.
இப்போ பிஸியா இருக்கேன்.அப்புறமா வரேன்னு சொல்லிடு"

Thursday, February 11, 2010

Noori Oh! Noori

சிநேகமாய் பார்த்துச் சிரிக்கிறாங்க
பச்சையும் தங்கமும்.

ரெம்ப நாள் சிநேகிதம் ..
சிறு ஹலோவில் ஆரம்பித்து
3 வருஷமாய்..தினம் தினம் ..

வீட்டிலே பெரிசுங்க தொல்லை.
அவங்க நொச்சு தாங்காம
வெளீலே சுத்தறேன்.
இன்னிக்கி ரொம்ப கத்திட்டாங்க
ரொம்ப சுத்தறேனாம்.
"ஒரு நல்ல வேலைதான் பாரேன்."

நல்ல மப்பு.ஒரே சிரிப்பு
எல்லாருமா சேர்ந்து வெளீல போனோம்.
பசங்க தான் கதவு திறந்து விட்டாங்க.

ஒருத்தன் கேட்டான்.
"உனக்கு honda crv எல்லாம் ஓட்ட வருமான்னு."

மவனே, இப்போ பாருடா...
ஒரே மிதில 120kph!
திரும்பி பார்த்துக் கேட்டேன்
சொல்றா, இது போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா ?

பச்சையும் தங்கமும் வாயே திறக்கலே.

சுளீர் வெய்யில்
பசங்க எவனையும் காணோம்.
ஒரே மூத்திர நாத்தம்.
கம்பி கேட்டு
வெளீல இருக்கிரவ சொல்றா
"2 பேர கொன்னுட்டேனாம்,
4 பேரு மேல ஏத்திடேனாம்
வண்டி அப்பளமா நொறுங்கிடிச்சாம்"


ஐயோ!

Inspired by Nooria Haveliwala. For full story read:

http://www.mumbaimirror.com/printarticle.aspx?page=comments&action=translate§id=15&contentid=201001312010013102234160665fc798a&subsite=